For Daily Alerts
Just In
ராமநாதபுரத்தில் புதிய வானிலை மையம்
சென்னை: புயல், மழை, வெள்ள எச்சரிக்கைகளை அறிவிக்கும் புதிய வானிலை மையம் ராமநாதபுரத்தில் அமைக்கப்படும் என்று வருவாய்த்துறை அமைச்சர் பெரியசாமி தெரிவித்தார்.
சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது அவர் பேசுகையில்,
தமிழ்நாட்டில் கடலோரங்களில் 124 புயல் எச்சரிக்கை மையங்கள் உள்ளன. இதில் 114 மையங்கள் உலக வங்கி நிதியுதவியுடன் பொதுப்பணித்துறை மூலம் புதுப்பிக்கப்பட்டு்ள்ளன.
மேலும் புதிதாக 78 எச்சரிக்கை மையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள இதற்கு மத்திய அரசின் அனுமதியை தமிழக அரசு எதிர்பார்த்து காத்துள்ளது.
கடலோரப் பகுதிகளில் மாங்குரோவ் காடுகள் வளர்க்கப்பட்டு வருவதால் அப்பகுதிகளில் கடல் அலைகளால் ஏற்படும் அச்சுறுத்தல் குறையும். இதனால் கடற்கரை தடுப்புச் சுவர் கட்டுவது தேவையற்றது என்றார்.
Comments
Story first published: Wednesday, July 8, 2009, 12:00 [IST]