பாக்.தான் தீவிரவாதிகளை உருவாக்கியது-சர்தாரி

Subscribe to Oneindia Tamil

Zardari
இஸ்லாமாபாத்: சில குறுகிய கால நோக்கங்களுக்காக பாகிஸ்தான்தான் தீவிரவாதிகளை உருவாக்கி, அவர்களை வளர்த்து விட்டது என்று பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

ஆனால் நாங்கள் உருவாக்கி வளர்த்த தீவிரவாதிகள் எங்களையே பதம் பார்க்க ஆரம்பித்துள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

முன்னாள் அரசு அதிகாரிகளை நேற்று இரவு சர்தாரி சந்தித்தார். அப்போது அவர்களிடம் சர்தாரி பேசுகையில், சில குறுகிய கால நோக்கங்களுக்காக பாகிஸ்தானில்தான் தீவிரவாதிகள் உருவாக்கப்பட்டு, வளர்க்கப்பட்டனர். வேண்டும் என்றே உருவாக்கப்பட்டவர்கள்தான் இவர்கள்.

ஆனால் இவர்கள் நியூயார்க் இரட்டை கோபுரத் தாக்குதலுக்குப் பின்னர் பாகிஸ்தானையே பதம் பார்க்க ஆரம்பித்து விட்டனர்.

நமக்கு நாமே உண்மையாக இருப்போம். உண்மைகளை நாம் மறைக்க முயலக் கூடாது. தைரியமாக ஒப்புக் கொள்வோம்.

இன்றைய தீவிரவாதிகள் நேற்றைய ஹீரோக்கள் ஆவர். செப்டம்பர் 11 தாக்குதலுக்கு முன்பு வரை தீவிரவாதிகள் நமக்கு சாதகமாக இருந்தார்கள். ஆனால் அதன் பின்னர் நம்மையே தாக்க ஆரம்பித்து விட்டனர் என்றார் சர்தாரி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+