ஐநா பாதுகாப்பு சபை-இந்தியாவுக்கு யுஎஸ் ஆதரவில்லை
ராஜ்யசபாவில் இது தொடர்பான கேள்விக்கு எழுத்து மூலமாக அவர் அளித்த பதில்:
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவை நிரந்தர உறுப்பு நாடாகச் சேர்ப்பதற்கு அமெரிக்கா ஆதரவு தெரிவிக்கவில்லை. கடந்த காலத்தில் நிரந்தர உறுப்பு நாடுகளின் எண்ணிக்கையை உயர்த்தியபோதுகூட இந்தியாவைச் சேர்ப்பதற்கு அமெரிக்கா ஆதரவு தெரிவிக்கவில்லை.
ஐநா பாதுகாப்புக் கவுன்சில் விரிவுபடுத்தப்பட வேண்டும், அதில் இந்தியாவை நிரந்தர உறுப்பு நாடாக சேர்க்க வேண்டும்.
பாகிஸ்தானில் உள்ள சீக்கிய மக்களிடம் ஜஸியா வரி (மாற்று மதத்தினர் கட்டாயம் செலுத்த வேண்டிய வரி) வசூலிக்கப்படுவது குறித்து அந் நாட்டு அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளோம்.
விடுதலைப் புலிகளுடனான போர் முடிவுக்கு வந்துள்ளதை அந்த நாட்டை மறுசீரமைப்பதற்கு கிடைத்த வாய்ப்பாக இலங்கை அரசு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். போரினால் இடம் பெயர்ந்த தமிழர்கள், மீண்டும் தங்கள் சொந்த ஊரில் குடியமர்த்தப்பட இந்தியா முழு ஒத்துழைப்பை வழங்கும்.
இதற்காக ரூ.500 கோடி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் கூடுதல் நிதி வழங்கப்படும். இந்திய அரசிடம் இலங்கை ஏற்கனவே உறுதியளித்தபடி, சிறுபான்மை தமிழர்களுக்கு முழு அதிகாரப் பகிர்வு வழங்குவதற்கு தேவையான அரசியல் நடவடிக்கைகளைத் தொடங்க வே�டும்.
இந்தியாவுடன் ஏற்கனவே செய்து கொ்ண்ட ஒப்பந்தந்படி, அரசியல் சட்டத்தின் 13வது திருத்தத்தை அமல்படுத்துவது தொடர்பாக தமிழர்கள் கட்சி உள்பட அனைத்து கட்சிகளுடனும் விரிவான பேச்சுவார்த்தையை இலங்கை தொடங்க வேண் என்று கூறியுள்ளார் கிருஷ்ணா.