சானியா - தொழிலதிபர் சோரப் மிர்ஸா நிச்சயதார்த்தம் முடிந்தது

சானியா மிர்ஸாவுக்கும், ஹைதாராபாத்தைச் சேர்ந்த பிரபல பேக்கரி நிறுவன அதிபரின் மகன் சோரப் மிர்ஸாவுக்கும் இரு வீட்டாரும் சேர்ந்து திருமணத்தை பேசி முடித்தனர்.
இதையடுத்து திருமண நிச்சயதார்த்தம் நேற்று ஹைதராபாத் தாஜ் கிருஷ்ணா ஹோட்டலில் கோலாகலமாக நடந்தது.
இரு தரப்பையும் சேர்ந்த குடும்பத்தினர், உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் மட்டும் இதில் கலந்து கொண்டனர். சானியாவுக்கு, சோரப் மிர்ஸா நிச்சயதார்த்த மோதிரம் அணிவித்தார். பதிலுக்கு சோரப்புக்கு சானியாவும் மோதிரம் அணிவித்தார்.
மீடியாவைச் சேர்ந்த யாரும் செய்தி சேகரிக்கவோ, படம் எடுக்கவோ அனுமதிக்கப்படவில்லை. ஹோட்டலில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
சானியாவின் டென்னிஸ் ஜோடியான மகேஷ் பூபதி, டென்னிஸ் வீரர் ரோஹன் போபன்னா, பேட்மிண்டன் சாம்பியன் கோபிசந்த், நடிக்ர சிரஞ்சீவி உள்ளிட்ட முக்கியப் பிரபலங்கள் சிலரும் இதில் கலந்து கொண்டனர்.
நிச்சயதார்த்தம் முடிந்து விட்டாலும் கூட திருமணம் உடனடியாக நடைபெறாது என தெரிகிறது. காரணம், இன்னும் சில காலம் சானியா விளையாடவுள்ளார். சோரப்பும் லண்டன் சென்று எம்.பி.ஏ படிக்கவுள்ளார்.
--












Click it and Unblock the Notifications