For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆப்கனில்தான் பதுங்கியிருக்கிறார் பின் லேடன்- பாக்.

By Staff
Google Oneindia Tamil News

Osama Bin Laden
லண்டன்: அல் கொய்தா தலைவர் பின் லேடனும், அந்த அமைப்பின் முக்கியத் தலைவர்களும் ஆப்கானிஸ்தானில் பதுங்கியிருப்பதாக கூறுகிறார் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக்.

இதுகுறித்து மாலிக் கூறுகையில், குனார் பகுதியில்தான் இவர்கள் பதுங்கியிருப்பதாக உறுதியான தகவல்கள் உள்ளன. அவர்கள் நிச்சயமாக பாகிஸ்தான் பிராந்தியத்திற்குள் இல்லை.

ஒருவேளை அவர்கள் இருந்திருந்தால் தற்போது அப்பகுதியில் குவிக்கப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கான பாகிஸதான் படையினரிடம் அவர்கள் சிக்கியிருப்பார்கள்.

அதேபோல அல் கொய்தா அமைப்பின் முக்கியத் தலைவர்களும் கூட பாகிஸ்தான் மண்ணில் இல்லை.

மேலும் பாகிஸ்தான் பகுதிக்குள் அமெரிக்கப் படைகள் நடத்தி வரும் ஏவுகணைத் தாக்குதலால் எந்தப் பலனும் இல்லை.

பாகிஸ்தான் அரசுக்கு கிடைத்துள்ள உறுதியான தகவல்களைப் பார்த்தால் நிச்சயம் பின் லேடன் ஆப்கானிஸ்தானில்தான் இருக்க வேண்டும். பாகிஸ்தானுக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளும் தற்போது குனார் பகுதியிலிருந்துதான் ஏவி விடப்படுகி்ன்றன. எனவே குனார் பகுதியில்தான் கொய்தா இயக்கத்தினர் பதுங்கியிருப்பதாக நம்புகிறோம்.

கடந்த பத்து மாதங்களாக 40க்கும் மேற்பட்ட ஏவுகணைத் தாக்குதல்களை பாகிஸ்தான் பகுதிக்குள் நடத்தியுள்ளது அமெரிக்கா. இதனால் எந்தப் பயனும் இல்லை. காரணம், அவர்களது எதிரி பாகிஸ்தானுக்குள் இல்லை. ஆப்கானிஸ்தானில்தான் அவர்கள் (லேடன் மற்றும் பிற தலைவர்கள்) பதுங்கியிருக்கிறார்கள்.

அமெரிக்கா தற்போது சின்ன மீனைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஆனால் உண்மையில் பெரிய மீன் (பின் லேடன்) குனார் பகுதியில்தான் உள்ளது என்றார் மாலிக்.

பின் லேடன் உயிருடன் இல்லை என்று முன்பு முஷாரப் கூறினார். பின்னர் அதிபர் சர்தாரியும் சில முறை இவ்வாறு கூறினார். இந்த நிலையில் ரஹ்மான் மாலிக் உயிருடன் இருப்பதாக கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X