For Quick Alerts
For Daily Alerts
Just In
அஸ்ஸாம்: கண்ணிவெடியில் கர்னல்-டிரைவர் பலி
குவஹாத்தி: அஸ்ஸாமில் இன்று காலை தீவிரவாதிகள் வைத்த கண்ணிவெடியில் சிக்கி ராணுவ கர்னல் ஒருவரும், டிரைவர் ஒருவரும் பலியானார்கள்.
பலிபாரா என்ற வனப் பகுதியில், இவர்கள் வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது கண்ணிவெடியில் வாகனம் சிக்கிக் கொண்டதில் இந்த சம்பவம் நேர்ந்தது.
சக்தி வாய்ந்த கண்ணிவெடி என்பதால் இருவரின் உடல்களும் சிதறிப் போய் விட்டன. வாகனமும் முற்றிலும் சேதமடைந்து விட்டது.
இந்த வாகனத்திற்குப் பின்னால் வந்த மற்ற வாகனங்கள் உடனடியாக நிறுத்தப்பட்டு விட்டன. இதனால் அவை தப்பின.
அருணாச்சலப் பிரதேச மாநிலத்தையொட்டியுள்ள, சீன எல்லைக்கு அருகில் உள்ள டேங்கா என்ற இடத்தில் உள்ள முகாமுக்கு போய்க் கொண்டிருந்தபோது கர்னல் விபத்தில் சிக்கினார்.
போடோ தீவிரவாதிகளே இதற்குக் காரணம் என சந்தேகிக்கப்படுகிறது.
Comments
Story first published: Monday, July 13, 2009, 12:33 [IST]