இலங்கையில் ரெட்கிராஸை வெளியேற்ற யு.கே எதிர்ப்பு
கொழும்பு: இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு சேவையாற்றி வரும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரின் பணிகளை நிறுத்தக் கூடாது. அவர்களை வெளியேற்ற முயற்சிக்கக் கூடாது. தொடர்ந்த பணியாற்ற அவர்களை அனுமதிக்க வேண்டும் என இலங்கை அரசுக்கு இங்கிலாந்து கோரிக்கை வைத்துள்ளது.
இதுகுறித்து இங்கிலாந்து வெளியுறவு அமைச்சக இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியில், இங்கிலாந்து அமைச்சர் லார்ட் மல்லூச் பிரவுன் இதுதொடர்பாக இலங்கை அரசை வலியுறுத்தியுள்ளார்.
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரின் பணிகளை குறைத்துக் கொள்ளுமாறு கூறியுள்ளதை வாபஸ் பெற வேண்டும். அவர்களை தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என இங்கிலாந்து கோரிக்கை விடுத்துள்ளது.
மரபு வழியிலான போர் முடிந்து விட்டதால், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் சேவை தேவையில்லை என்ற முடிவுக்கு வரக் கூடாது. இன்னும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெருமளவிலான நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.
முகாம்களில் உள்ள மக்களுக்கு மறுவாழ்வுப் பணிகளை செய்ய வேண்டியுள்ளது.
எனவே மனிதாபிமான அடிப்படையில், செஞ்சிலுவைச் சங்கத்தினரின் பணிகள் தொடர இலங்கை அரசு அனுமதி அளிக்க வேண்டும். அவர்களின் சேவை தொடர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications