நாமக்கல்லில் 31 பெட்ரோல் குண்டுகள் கண்டுபிடிப்பு - 2 பேர் கைது
நாமக்கல்: நாமக்கல்லில் 31 பெட்ரோல் குண்டுகள் சிக்கியுள்ளன. இவற்றைப் பதுக்கி வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். நகராட்சி கவுன்சிலர் ஒருவருக்கு போலீஸார் வலை வீசியுள்ளனர்.
நாமக்கல் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் அன்பு என்கிற அன்பழகன். நகராட்சியில் சுயேச்சை கவுன்சிலராக இருக்கிறார். அன்புவிந் மகன் ஹரி (25). இவர் நாமக்கல் பஸ்நிலையத்தில் ஹோட்டல் வைத்துள்ளார்.
இவருக்கும், நாமக்கல் கொசவம்பட்டியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அழகு மலைக்கும் என்பவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், இருவரும் காயமடைந்தனர்.
இந்த நிலையில் போலீசார் நேற்று மேட்டுத்தெருவில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அன்பு வீட்டின் அருகே உள்ள காலிநிலத்தில் பெட்ரோல் மற்றும் வார்னீஷ் ஆகியவற்றை பாட்டிலில் ஊற்றி, வெடிகுண்டு தயாரித்து கொண்டு இருந்த 2 பேரை சுற்றி வளைத்தனர்.
விசாரணையில் அவர்கள் நாமக்கல் ரகுவரன் (20) என்பதும், பாஸ்கர் (35) என்பதும் தெரியவந்தது.
அவர்கள் தயாரித்து வைத்திருந்த 31 வெடிகுண்டு பாட்டில்களையும், அவற்றில் இருந்து 2 ஆயிரத்து 500 மி.லிட்டர் பெட்ரோல் மற்றும் 1520 மி.லிட்டர் வார்னீஷ் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
கவுன்சிலர் அன்பழகன் பணம் கொடுத்து மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில், பெட்ரோல் கையெறி வெடிகுண்டுகள் தயாரிக்க சொன்னதாக கூறினர்.
இதையடுத்து அன்பழகனை போலீஸார் தேடினர். ஆனால் அவர் தலைமறைவாகி விட்டார். அவரைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications