For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆஸ்திரேலியா நோக்கி சென்ற 70 தமிழ் அகதிகள் மீட்பு

By Staff
Google Oneindia Tamil News

கிறிஸ்துமஸ் தீவு: ஆஸ்திரேலியா நோக்கிச் சென்று கொண்டிருந்த 70க்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர்.

மீன் பிடி படகு ஒன்றில் இவர்கள் உயிரைப் பயணம் வைத்து வந்துள்ளனர். அப்போது இவர்களைப் பார்த்த சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படை ரோந்து விமானம் உடனடியாக அங்கு மீட்புப் படைகளை அனுப்பி வைத்தது.

இதையடுத்து விரைந்து வந்த மீட்புப் படையினர், கிறிஸ்துமஸ் தீவு அருகே வந்து கொண்டிருந்த தமிழர்களின் படகை இடைமறித்து அழைத்துச் சென்றனர்.

இதுகுறித்து உள்துறை அமைச்சர் பிரன்டென் ஓ கானர் கூறுகையில், படகில் 73 பேர் இருந்தனர் என்று தெரிய வந்துள்ளது. இவர்கள் கிறிஸ்துமஸ் தீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்களை சோதனையிட்டபின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும்.

படகில் இருந்த அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இந்தப் படகு கடந்த வாரம் ஆஸ்திரேலியாவுக்கு வரும் வழியில் மூழ்கியதாக முன்னர் கூறப்பட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X