3 ஆண்டுகளில் 56 போர் விமானங்கள்-ஹெலிகாப்டர்கள் நாசம்
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து லோக்சபாவில் அவர் எழுத்துப் பூர்வமாக அளித்த பதிலில், கடந்த மூன்று நிதியாண்டுகளில் (ஜூலை 2ம் தேதி வரை) 37 விமானங்களும், 19 ஹெலிகாப்டர்களும் விபத்தில் சிக்கியுள்ளன.
இந்த விபத்துக்களில் முப்படைகளையம் சேர்ந்த 34 பேர் உயிரிழந்துள்ளனர். ரூ. 6.3 லட்சம் மதிப்புள்ள சொத்துக்கள் சேதமடைந்துள்ளன.
இந்த விபத்துகளுக்கு தொழில்நுட்பக் கோளாறுகளும், மனிதத் தவறுகளுமே முக்கிய காரணங்களாகும் என்றார் அந்தோணி.
இன்னொரு கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், சியாச்சின் போன்ற அதிக உயரம் கொண்ட இடங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள வீரர்களுக்கு சிறப்பு உடைகள், உணவுகளை பாதுகாத்து வைத்துக் கொள்ளும் வசதிகள் செய்து தரப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications