For Daily Alerts
Just In
விரும்பினால் மட்டும் சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு!
டெல்லி: சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத் தேர்வை மாணவர்கள் விரும்பினால் மட்டுமே எழுதலாம்.
இத் தகவலை மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் புரந்தேஸ்வரி தெரிவித்தார்.
மக்களவையில் அவர் பேசுகையில்,
சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத் தேர்வை மாணவர்கள் விரும்பினால் மட்டுமே எழுதலாம். இதை எழுதுமாறு மாணவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
பொதுத் தேர்வைப் போல பள்ளிகளிலேயே தேர்வு நடத்தி, விடைத்தாளை அந்தந்த பள்ளிகளிலேயே திருத்தி மாணவர்களின் திறனை அறியவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
பள்ளி கல்விக்காகத் தனிப்பட்ட தேசிய வாரியம் ஒன்றை அமைப்பது குறித்து தற்போதைக்கு எவ்விதத் திட்டமும் இல்லை.
Comments
Story first published: Tuesday, July 14, 2009, 17:35 [IST]