ஓகேனக்கல்லில் வெள்ள அபாய எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

Mettur Dam
ஓகேனக்கல்: கர்நாடகத்தின் கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து அதிக அளவில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் ஓகேனக்கல் பகுதியில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கேரளத்திலும் கர்நாடகத்திலும் பருவ மழை சூடு பிடித்துள்ளதால் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பிவிட்டன. இதையடுத்து அங்கிருந்து உபரி நீர் காவிரியி்ல் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அணைகளைக் காப்பதற்காக வெளியேற்றப்படும் இந்த உபரி நீர், ஓகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வந்து கொண்டுள்ளது.

மேட்டூர் அணைக்கு தற்போது விநாடிக்கு 16,000 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. அணையிலிருந்து குடிநீருக்காக 1,000 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.

இதனால் அணையின் நீர் மட்டம் இன்று காலை 60.62 அடியாக உயர்ந்துள்ளது.

இந் நிலையில் கர்நாடகத்தில் இருந்து வரும் நீரின் அளவு அதிகரித்துக் கொண்டுள்ளதால் ஓகேனக்கல் மற்றும் அதன் சுற்றுப் பகுதி கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

ஓகேனக்கல் அருவியில் யாரும் குளிக்க வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் படகுகளை இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அமுதா வெளியிட்டுள்ள உத்தரவில், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக அப் பகுதிகளை விட்டு வெளியேறுமாறு கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+