நெல்லையில் மூ.மு.க. பிரமுகர் படுகொலை
Subscribe to Oneindia Tamil

நெல்லை மேலப்பாளையம் அருகே உள்ள மேல நத்தம் பகுதியை சேர்ந்தவர் சிவசாமி (45). மூவேந்தர் முன்னணி கழக மாநகர் மாவட்ட செயலாளராகவும், தென்மண்டல அமைப்பு செயலாளராகவும் பணியாற்றி வந்தார்.
இன்று காலை மேலப்பாளையம் ரெயில்வே கேட் அருகே உள்ள டீக்கடையில் அமர்ந்திருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு கும்பல் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டினார்கள்.
இதில் ரத்த வெள்ளத்தில் துடித்த சிவசாமி சில நிமிடங்களில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த படுகொலையால் அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது. போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கொலையாளிகளைப் பிடிக்க போலீஸார் வலை வீசியுள்ளனர்.












Click it and Unblock the Notifications