தாம்பரம்-மதுரவாயல் டோல் கட்டணம்: மக்கள் கொதிப்பு
சென்னை: தாம்பரம்- மதுரவாயல் இடையிலான நெடுஞ்சாலையில் செல்வதற்கான கட்டணம் மும்மடங்காக உயர்த்தப்பட்டுள்ளதால் வாகனதாரர்கள் கொதிப்படைந்துள்ளனர்.
இந்த சாலையை தேசிய நெடுஞ்சாலை ஆணையகம் நிர்வகித்து வருகிறது. இந்தத் துறை முன்பு டி.ஆர். பாலு வசம் இருந்தது. அப்போதுதான் இந்த சாலை போடப்பட்டது.
இந்த சாலையில் செல்லும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கார்களுக்கு ரூ. 10ம், வேன்களுக்கு ரூ. 15ம், பஸ்களுக்கு ரூ. 25ம் நுழைவுக் கட்டணமாக இருந்து வந்தது.
இந்த நிலையில், மேற்கண்ட கட்டணங்களை முறையே 30, 40, 85 என குண்டாங்குறையாக உயர்த்தி விட்டனர். ஜூலை 4ம் தேதி முதல் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.
அதேபோல ஒரு முறை சென்று திரும்பக் கூடிய (24 மணி நேரங்களுக்குள்) வாகனங்களுக்கான கட்டணமும், கார்கள், வேன்கள், லாரிகள்-பஸ்களுக்கு முறையே ரூ. 40, 60, 125 என உயர்த்தியுள்ளனர். முன்பு இது ரூ. 15, 22.50, 37.50 என இருந்தது.
இந்த அதிரடி கட்டண உயர்வுக்கு அனைத்து வாகனதாரர்களும் கடும் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். இது மிக மிக அநியாயமான உயர்வு, இதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இல்லாவிட்டால் இந்த சாலையில் பயணிப்பதை புறக்கணிக்கும் போராட்டத்தை நடத்துவோம் என அறிவித்துள்ளனர்.
இந்தப் பிரச்சினை தொடர்பாக தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையகத்திடம், சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் லாரி, டேங்கர், டிப்பர், டிரய்லர், வேன் உரிமையாளர்கள் நலச் சங்கம் எடுத்துச் சென்றுள்ளது.
இதுகுறித்து அமைப்பின் தலைவர் ஆர்.சுகுமார் கூறுகையில், இது கொஞ்சம் கூட நியாயமே இல்லாத உயர்வு. மதுரவாயல் - மாதவரம் இடையிலான பைபாஸ் சாலையின் 2வது கட்டப் பணிகள் இன்னும் முடியவடையாத நிலையில், அங்கு இன்னும் 3 பாலங்கள் கட்டப்படாத நிலையில், இப்படி ஒரு உயர்வை அறிவித்திருப்பது ஏற்றுக் கொள்ள முடியாததாகும்.
43 கிலோமீட்டர் தொலைவு கொண்ட சென்னை - தடா நெடுஞ்சாலையில் வசூலிப்பதை விட, வெறும் 20 கிலோமீட்டர் தொலைவு மட்டுமே கொண்ட தாம்பரம் - மதுரவாயல் பிரிவில் கட்டணம் வசூலிப்பது நியாயமற்றதாகும் என்றார்.
ஆனால் கட்டணத்தைக் குறைக்கும் வாய்ப்பே இல்லை என்று அலட்சியமாக கூறுகிறது தேசிய நெடுஞ்சாலைகள் துறை ஆணையகம்.
ஏற்கனவே ஐடி நெடுஞ்சாலை மற்றும் சென்னை -தடா நெடுஞ்சாலையில் கட்டண உயர்வைக் கண்டித்து சில லாரி உரிமையாளர்கள் உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications