தைவானில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்
Subscribe to Oneindia Tamil

அந் நாட்டு நேரப்படி நள்ளிரவு 2 மணிக்கு இலான் என்ற இடத்தில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் கட்டிடங்கள் குலுங்கின. இதையடுத்து தூங்கிக் கொண்டிருந்த மக்கள் அலறிக் கொண்டு தெருக்களுக்கு ஓடினர்.
நில நடுக்கத்தின் மையத்திலிருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ள தலைநகர் தைபேவிலும் வீடுகள், கட்டிடங்கள் அதிர்ந்தன.
இந் நிலையில் அதே இடத்தில் 2.02 மணிக்கு இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.0 புள்ளிகளாக இருந்தது.
இதையடுத்து மீண்டும் 6.3 புள்ளிகள் அளவுக்கு 2.05 மணிக்கு மூன்றாவது முறையும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதையடுத்து சுனாமி ஏற்படலாம் என நாடு முழுவதும் எச்சரிக்கை விடப்பட்டது.
பெரும் உயரமான கட்டடங்கள் கொண்ட தைவானி்ல் அடிக்கடி நில நடுக்கங்கள் ஏற்படுவதுண்டு. கடந்த 1999ம் ஆண்டு ஏற்பட்ட நில நடுக்கத்துக்கு 2,400 பேர் பலியாகியினர்.












Click it and Unblock the Notifications