'ஸ்வைன்'- ஹைதராபாத் கூகுள் அலுவலகத்திற்கு லீவு!
ஹைதராபாத்: பன்றிக் காய்ச்சல் பீதி காரணமாக தனது ஹைதராபாத் அலுவலகத்தை 2 நாட்களுக்கு மூடியுள்ளது கூகுள்.
ஹைதராபாத் கூகுள் அலுவலக ஊழியர் ஒருவருக்கு பன்றிக் காய்ச்சல் பரவியிருப்பது தெரிய வந்ததைத் தொடர்ந்து இந்த 2 நாள் விடுமுறை அறிவித்துள்ளது கூகுள்.
அந்த ஊழியர் தவிர மேலும் 7 பேருக்கும் அறிகுறிகள் தெரிவதாலும் அவசரமாக விடுமுறை விடப்பட்டுள்ளதாம்.
நேற்று மூடப்பட்ட அலுவலகம் இன்றும் மூடப்பட்டுள்ளது. நாளை மீண்டும் பணிகளைத் தொடங்கவுள்ளனர் ஹைதராபாத் கூகுள் ஊழியர்கள்.
தனது ஊழியர்களில் ஒருவருக்கு பன்றிக் காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளாக தெரிவித்துள்ள கூகுள், மேலும் 7 பேருக்கு அறிகுறிகள் தெரிவதாகவும், இருப்பினும் அது உறுதிப்படுத்தப்படவிலலை என்றும் விளக்கியுள்ளது.
இதற்கிடையே, ஹைதராபாத்தில் உள்ள சத்யம், ஜென்பேக்ட், அமேசான் டெவலப்மென்ட் மையம் உள்ளிட்ட சாப்ட் வேர் நிறுவனங்கள், தங்களது ஊழியர்களை கவனமுடன் இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளன.
மேலும், டாக்டர்கள் குழுக்களையும் வரவழைத்து ஊழியர்களுக்கு மருத்துவப் பரிசோதனைகளையும் நடத்தி வருகின்றன.
ஹைதராபாத் சாப்ட்வேர் துறையினர் பீதிக்குள்ளாக முக்கிய காரணமே, ஆந்திராவில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலனோர் சாப்ட்வேர் என்ஜீனியர்கள் என்பதால்.
இவர்களில் பலரும் வெளிநாடுகளுக்குப் போய் விட்டு வந்ததால் பன்றிக் காய்ச்சல் பாதிப்புக்கு ஆளானவர்கள். இதன் காரணமாக அனைத்து சாப்ட்வேர் அலுவலகங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications