For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புலிகள் தாக்கலாம்-இலங்கை போலீஸ் எச்சரிக்கை

By Staff
Google Oneindia Tamil News

LTTE Cadre
கொழும்பு: விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இருப்பவர்கள் நாச வேலைகளில் ஈடுபடலாம். எனவே பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என இலங்கை போலீஸ் ஐஜி எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அந்த ஐஜி வெளியிட்டுள்ள அறிக்கையில், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிந்து விட்டாலும் கூட, அவர்களுக்கு ஆதரவானவர்கள் தெற்கில் நாச வேலைகளி்ல் ஈடுபடலாம்.

எனவே பொதுமக்கள் மிகுந்த உஷார் நிலையில் இருக்க வேண்டும்.

காவல்துறையின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கோரியுள்ளார்.

இதற்கிடையே, கேப் கொலராடோ கப்பல் மூலம் வந்துள்ள வணங்காமண் நிவாரணப் பொருட்களை செஞ்சிலுவைச் சங்கம் வவுனியாவில் உள்ள இடம் பெயர்ந்தோர் முகாம்களில் இந்த வாரத்திற்குள் விநியோகிக்கவுள்ளதாம்.

அரிசி, கோதுமை மாவு, சர்க்கரை, உணவு தானியங்கள் வந்துள்லதாகவும், மொத்தம் 650 மெட்ரிக் டன் பொருட்கள் வந்துள்ளதாகவும் செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X