ஊழல்-கோவை அண்ணா பல்கலை துணைவேந்தர் மீது புகார்
சென்னை: ஊழல் புகாரில் சிக்கியுள்ள கோவை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் ராதாகிருஷ்ணன் மீது லஞ்ச ஒழிப்புப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் சிவபாண்டி என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். அவரது சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.சந்திரன் ஆஜரானார்.
சிவபாண்டி தனது மனுவில், கோவை அண்ணா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக டாக்டர் ராதாகிருஷ்ணன் 2.7.2007-ம் தேதி பதவியேற்றார். அவர் பதவியேற்ற நாளில் இருந்து அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார்.
அரசு - தனியார் பங்களிப்புடன் கூடிய திட்டத்தை கொண்டு வந்து அதன் மூலம் தனக்கு வேண்டப்பட்ட நிறுவனங்களுக்கு புதிய கல்லூரிகள் தொடங்க அனுமதி வழங்கியுள்ளார். அத்துடன் தனது மனைவி பெயரில் ஒரு டிரஸ்ட் தொடங்கி அதன் மூலம் ரூ.1.5 கோடி மதிப்புள்ள அளவுக்கு சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார்.
மனைவி பெயரில் புதிய பொறியியல் கல்லூரி தொடங்கவும் அனுமதி வழங்கியுள்ளார். பேராசிரியர் நியமனத்திலும் முறைகேடு செய்துள்ளார். இவரது முறைகேடு குறித்து 30.5.2009-ம் தேதி தமிழக அரசின் தலைமை செயலாளர், கவர்னர், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் ஆகியோரிடம் புகார் அளித்தேன்.
ஆனால் இதுவரை இந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. எனவே நான் கொடுத்த புகார் மனு மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
தலைமை நீதிபதி எச்.எல்.கோகலே, நீதிபதி வெங்கட்ராமன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு இன்று இந்த மனு பரிசீலனைக்கு வந்தது.
என்.ஆர்.சந்திரன் வாதிடுகையில், கோவை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் முறைகேடு குறித்து விசாரிக்க கவர்னர் உத்தரவிட்டு இருப்பதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. இதுபற்றிய அரசின் நிலையை தெரியப்படுத்த வேண்டும் என்று கோரினார்.
அரசுத் தரப்பில் கேட்டு பதில் சொல்வதாக அரசு வக்கீல் தெரிவித்தார்.
இதையடுத்து இன்று பிற்பகலுக்கு மனுவை ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
துணைவேந்தர் மீதான ஊழல் புகார்கள் குறித்து விசாரணை நடத்துமாறு ஊழல் தடுப்புப் போலீஸாருக்கு ஏற்கனவே ஆளுநர் பர்னாலா உத்தரவிட்டுள்ளார். இருப்பினும் போலீஸார் இன்னும் விசாரணையைத் தொடங்காமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
-
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்!












Click it and Unblock the Notifications