Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

40,000 கனஅடி நீர் திறப்பு-காவிரியில் வெள்ளம்!

Subscribe to Oneindia Tamil

Flooding in Cauvery as water released from KRS and Kabini
மைசூர்: கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளில் நீர்மட்டம் மிக வேகமாக அதிகரித்துவிட்டதால் இந்த இரு அணைகளில் இருந்தும் காவிரி ஆற்றில் வினாடிக்கு 40,000 கன அடி நீர் திறக்கப்பட்டது. இதனால் காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

காவிரி ஆறு உற்பத்தியாகும் குடகு மாவட்டத்தில் கடந்த பல நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் பாகமண்டலா உள்ளிட்ட பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.

மைசூர் மாவட்டம் எச்.டி.கோட்டையில் உள்ள கபினி அணையில் நீர்மட்டம் 2,282.15 அடியைத் தொட்டுவிட்டது. இதன் மொத்த கொள்ளவு உயரம் 2,284 அடியாகும். இந்த அணை முழுமையாக நிரம்ப இன்னும் 2 அடி நீர் மட்டுமே பாக்கியுள்ளது. எந்த சமயத்திலும் அணை நிரம்பிவிட வாய்ப்புள்ளது.

இந் நிலையில் அணைக்கு வினாடிக்கு 35,500 கன அடி வீதம் தண்ணீர் வந்ததால் அதிலிருந்து வினாடிக்கு 35,000 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

காவிரி பாசனப் பகுதியில் உள்ள பெரிய அணையான கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 98.90 அடியாக உள்ளது. இந்த அணையின் மொத்த கொள்ளவு உயரம் 124.80 அடி.

அணைக்கு வினீடிக்கு 17,472 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தால் அணையிலிருந்து வினாடிக்கு 4,448 கன அடிவீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

இதனால் காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நீர் முழுவதும் மேட்டூரை அடைய உள்ளது.

மழை மேலும் தீவிரமானால் இந்த இரு கர்நாடக அணைகளில் இருந்தும் இன்னும் அதிக அளவு தண்ணீர் திறந்துவிடப்படும் என்று தெரிகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+