சென்னை: மிளகாய் மண்டியில் தீ-ரூ1.5 கோடி நாசம்
சென்னை: சென்னை அருகே நல்லூர் என்ற இடத்தில் உள்ள மிளகாய் மண்டியில் இன்று பெரும் தீவிபத்து ஏற்பட்டது. இதில் ரூ. 1.5 கோடி மதிப்புள்ள பொருட்கள், மிளகாய் ஆகியவை எரிந்து நாசமாயின.
சென்னை தியாகராய நகரை சேர்ந்தவர் நரசிம்மராயலு. இவர் நல்லூர் ஊராட்சி அம்பேத்கார் நகர் திருவள்ளூர் சாலையில் மிளகாய் மண்டி ஒன்றை நடத்தி வருகிறார்.
இங்கு ஆந்திரா மாநிலம் குண்டூரில் இருந்து மிளகாயும், ஒரிசாவில், நாகையில் இருந்து சோளம், வேர்க்கடலையும் வருகின்றன.
இவற்றை மண்டியில் சுத்தம் செய்து மலேசியா, சிங்கப்பூருக்கு கப்பல் மூலம் அனுப்புகின்றனர். இந்த மண்டியில் எப்போதும், ஏராளமான மிளகாய் மற்றும் பொருட்களை ஸ்டாக் இருக்கும்.
இன்று அதிகாலை 2 மணியளவில் திடீரென மண்டியில் தீப்பிடித்துக் கொண்டது. வேகமாக பரவிய தீ கிட்டங்கி முழுவதையும் எரித்து விட்டது.
தீவிபத்தில் ரூ. 1.5 கோடி மதிப்பிலான சோளம், மிளகாய், வேர்க்கடலை ஆகியவை கருகிப் போயின. இந்தத் தீ அருகில் இருந்த கோவில், வீடு ஆகியவற்றுக்கும் பரவியது.
செங்குன்றம், செம்பியம், ஆவடி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.