சென்செக்ஸ்-400 புள்ளிகளுக்கு மேல் உயர்வு!
மும்பை: பங்குச் சந்தையில் நான்காவது நாளாக தொடர்ந்து குறியீட்டெண்கள் உயர்ந்து வருவது முதலீட்டாளர்களை பெரும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
வாரத்தின் கடைசி நாளான இன்று மட்டும் வர்த்தகம் முடிய ஒரு மணி நேரத்துக்கு முன்பு வரை 422 புள்ளிகள் உயர்ந்திருந்தது சென்செக்ஸில்.
இன்று காலை வர்த்தகம் துவங்குவதற்கான மணி அடித்த சிறிது நேரத்தில் கிடுகிடுவென 200 புள்ளிகள் உயர்ந்தது சென்செக்ஸில்.
தேசிய பங்குச் சந்தை நிப்டியில் 134 புள்ளிகள் உயர்ந்தன. இந்த ஒரு வாரத்தில் சென்செக்ஸ் 400 புள்ளிகளைத் தாண்டியது இது மூன்றாவது முறையாகும்.
ஆட்டோமொபைல் மற்றும் ரியல் எஸ்டேட் துறைகளின் பங்குகள் நல்ல விலைக்குக் கைமாறின. ஒட்டுமொத்தமாக இந்தத் துறைகளில் 4 சதவிகித வளர்ச்சி காணப்பட்டது.
மகிந்திரா அண்ட் மகிந்திரா, ஐசிஐசிஐ, டிசிஎஸ், டாடா மோட்டார்ஸ், பார்தி ஏர்டெல் போன்ற முதல் நிலைப் பங்குகள் நல்ல லாபத்தில் கைமாறின.
ஏசிசி, இந்துஸ்தான் யுனிலீவர், சன் பார்மாவின் பங்குகள் மட்டும் சரிவைச் சந்தித்தன.












Click it and Unblock the Notifications