விரைவு தரிசனம்.. திருப்பதியில் வாடகைக்கு குழந்தைகள்
Subscribe to Oneindia Tamil
திருப்பதி: திருப்பதி கோவிலில் கைக்குழந்தையுடன் வரும் பெற்றோருக்கு உடனடி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுவதையடுத்து, திருப்பதியில் குழந்தைகளை வாடகைக்கு விடும் கும்பல்கள் முளைத்துள்ளன.
இவர்களிடம் வாடகைக்கு குழந்தைகளை வாங்கிக் கொண்டு வர ஆரம்பித்துள்ளனர் பல பக்தர்கள்.
குழந்தைக்கு ரூ. 2,000 வரை வசூலிக்கின்றனவாம் இந்தக் கும்பல்கள்.
இதையடுத்து வாடகைக் குழந்தைகளைத் தடுக்க தரிசனம் செய்த பின் குழந்தைகளின் கை விரலில் அடையாள மை வைக்க ஆரம்பித்துள்ளனர். நேற்று முதல் இந்த அடையாள மை திட்டம் அமல்படுத்தப்பட்டது.
மேலும் உடனடி தரிசனத்துக்கு வரும் குழந்தைகளை கேமரா மூலம் கண்காணிக்கவும் ஆரம்பித்துள்ளது தேவஸ்தானம்.
தேவுடா.. தேவுடா..












Click it and Unblock the Notifications