ஜம்மு-போலீஸ் காவலிலிருந்து இலங்கையர் ஓட்டம்
Subscribe to Oneindia Tamil
ஜம்மு: ஜம்முவில் காவல் நிலையத்தில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்த இலங்கை நபர் சாதுரியமாக தப்பி ஓடி விட்டார். இதையடுத்து 2 போலீஸார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இலங்கையைச் சேர்ந்தவர் ஹூசேன் நப்ராஸ் நவாஸ். இவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கடத்தல் பொருட்களுடன் ஜம்முவில் பிடிபட்டார்.
சிறையில் அடைக்கப்பட்ட அவரை, நாடு கடத்த உள்ளூர் கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து ஜம்மு கேனால் ரோடு போலீஸாரிடம் சிறை நிர்வாகம் ஹூசேனை ஒப்படைத்தது.
அவரை நாடு கடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில் நேற்று சாதுரியமாக காவல் நிலையத்திலிருந்து தப்பி விட்டார் ஹூசேன்.
இந்த சம்பவத்தால் ஜம்மு காவல்துறை வட்டாரத்தில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. பணியில் அஜாக்கிரதையாக இருந்ததாக முன்ஷி முஷ்டாக் அகமது உள்ளிட்ட இரு காவல்ர்களை மாவட்ட எஸ்.பி. மனோகர் சிங் சஸ்பெண்ட் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications