20ம் தேதி அதிமுக அவசர செயற்குழு கூட்டம் - குன்னூரில் நடக்கிறது
சென்னை: அதிமுகவின் அவசர செயற்குழுக் கூட்டம் வருகிற 20ம் தேதி குன்னூரில் கூடுகிறது.
சட்டசபை இடைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. இதையடுத்து அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாகி வருகின்றன.
திமுக சார்பில் போட்டியிடுவோர் விருப்ப மனுக்களை வழங்கலாம் என அக்கட்சி அறிவித்துள்ளது.
இந்த நிலையில் அதிமுகவும் தேர்தலுக்கு ஆயத்தமாகியுள்ளது. அக்கட்சியின் அவசர செயற்குழுக் கூட்டம் வருகிற 20ம் தேதி குன்னூரில் நடைபெறுகிறது.
இதுகுறித்து கொடநாடு எஸ்ட்டேடில் ஓய்வெடுத்து வரும் கட்சிப் பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:
அ.தி.மு.க. செயற்குழு அவசர கூட்டம் வரும் 20-ந் தேதி மாலை 3 மணிக்கு நீலகிரி மாவட்டம், குன்னூர் உபாசி சாலையில் உள்ள விவேக் ஓட்டலில், கட்சியின் அவைத்தலைவர் இ.மதுசூதனன் தலைமையில் நடைபெறும்.
கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் வருகை தந்து கட்சியின் செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று கேட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications