மாயாவதியை விமர்சித்த ரீட்டா பகுகுணாவுக்கு ஜாமீன்
Subscribe to Oneindia Tamil
மொரதாபாத் (உ.பி): உ.பி. முதல்வர் மாயாவதியை தரக்குறைவாக விமர்சித்ததாக கைது செய்யப்பட்ட மாநில காங்கிரஸ் தலைவர் ரீட்டா பகுகுணா ஜோஷிக்கு மொராதாபாத் கோர்ட் ஜாமீன் வழங்கியுள்ளது.
கற்பழிக்கப்பட்ட தலித் பெண்ணுக்கு உ.பி. அரசு வழங்கிய இழப்பீடு நிதி குறித்து கருத்து தெரிவித்தபோது மாயாவதியை தரக்குறைவாக விமர்சித்ததாக கூறி ரீட்டா அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனு நேற்று விசாரிக்கப்பட்டது.
மனுவை விசாரித்த மொராதாபாத் நீதிமன்றம், ரீட்டாவை, 29ம் தேதி வரை தற்காலிக ஜாமீனில் விடுதலை செய்ய உத்தரவிட்டது.
இதையடுத்து ரீட்டா ரூ.30 ஆயிரம் சொந்த ஜாமீன் செலுத்தி சிறையில் இருந்து விடுதலையானர்.












Click it and Unblock the Notifications