சென்னையில் துண்டு துண்டாக வெட்டிக் கொல்லப்பட்டவரின் தலை சிக்கியது

சென்னையில் 2 மாதங்களுக்கு முன்பு நகை புரோக்கர் சுரேஷ் குமார் என்பவர் கொலை செய்யபப்ட்டார். அவரது உடலை துண்டு துண்டாக வெட்டிய கொலை கார கும்பல், கை, கால்கள், உடலை தனித் தனியாக 3 இடங்களில் போட்டு விட்டுச் சென்றது.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில், இதுவரை துப்பு துலங்கவில்லை. மேலும், சுரேஷ்குமாரின் தலையும் சிக்காமல் இருந்து வந்தது.
இந்த நிலையில், பிராட்வே, தம்புச் செட்டித் தெருவில் உள்ள ஒரு குப்பைத் தொட்டியில் மண்டை ஓடு ஒன்று கிடப்பதாக போலீஸாருக்குத் தகவல் வந்தது.
இதையடுத்து போலீஸார் விரைந்து வந்து அந்த மண்டை ஓட்டை மீட்டனர்.
தலையை இரண்டாக வெட்டியுள்ளனர் கொலைக் கும்பலைச் சேர்ந்தவர்கள். மேலும், அமிலத்தை ஊற்றி சதைப் பகுதி முழுவதையும் சுத்தமாக அழித்துள்ளனர். இதனால் யாரும் அவ்வளவு எளிதில் அடையாளம் காண முடியாத அளவுக்கு செய்துள்ளனர்.
இது சுரேஷ்குமாரின் மண்டை ஓடாக இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
இதையடுத்து மண்டை ஓட்டை தடவியல் சோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications