ஆலடி அருணா கொலை-விடுதலையானவர் கைது!
நெல்லை: முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட பிரமுகர், உரிமம் இல்லா துப்பாக்கி வைத்திருந்த காரணத்தால் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா கடந்த 2006 ம் ஆண்டு வாக்கிங் சென்ற போது மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் முக்கிய பிரமுகர் சிலரையும், ரவுடிகள் சிலரையும் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தை அடுத்துள்ள சிவலார்குளத்தை சேர்ந்த ஆறுமுகம் (30) என்பவரும் இந்த வழக்கில் கைதானார். பின்பு, விடுதலை செய்யப்பட்டார்.
இவரும் ஆலங்குளத்தை சேர்ந்த நவநீத கிருஷ்ணன் (50) என்பவரும் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித் திரிவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் இன்ஸ்பெக்டர் பாண்டி, ஆலங்குளம் பகுதியில் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இவர்கள் இருவரிடமும் சோதனை நடத்தினர்.
அப்போது உரிமம் இல்லா இரட்டை குழல் கைத்துப்பாக்கி ஒன்றை ஆறுமுகமும், நவநீதகிருஷ்ணனும் வைத்திருந்தனர். இதனையடுத்து அவர்கள் இருவரையும் இன்ஸ்பெக்டர் பாண்டி கைது செய்தார்.
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம்












Click it and Unblock the Notifications