தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் அகழியில் குண்டு வெடிப்பு

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: தஞ்சையில் உள்ள பெரிய கோவில் எனப்படும் பிரகதீஸ்வரர் கோவில் அகழியில் குண்டு வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சைப் பெரிய கோவில் முன் சுமார் 40 அடி ஆழம் கொண்ட அகழி உள்ளது. கோயில் பாதுகாப்பிற்காக வெட்டப்பட்ட இந்த அகழி, கழிவுநீர் தேங்கி, முள் செடிகள் வளர்ந்து மண்டிக் கிடக்கிறது.

இந்த அகழியில் சனிக்கிழமை இரவு பலத்த சப்தத்துடன் குண்டுவெடித்தது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும், தஞ்சாவூர் சரக டிஐஜி அபய்குமார் சிங், மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் செந்தில்வேலன், நகர துணைக் கண்காணிப்பாளர் இளம்பரிதி ஆகியோர் பெரிய கோயிலுக்கு வந்தனர்.

அகழியில் இறங்கி சோதனையிட்டனர். அங்கு முகம் சிதறிய நிலையில் ஒரு நாய் இறந்து கிடந்தது.
வெடிகுண்டு நிபுணர்கள் வெடிபொருளின் துகள்களைச் சேகரித்தனர். ஆனால், எந்த வகையான குண்டு வெடித்தது என்பதைக் கண்டறிய முடியவில்லை.

நாயின் வாய் மற்றும் மார்புப் பகுதிகள் "ஸ்கேன்' எடுக்கப்பட்டு, அங்கிருந்த வெடிபொருளின் துகள்கள் பரிசோதிக்கப்பட்டன.

தஞ்சைக் கோவில் அகழியில் குண்டுவெடித்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+