For Daily Alerts
Just In
மேட்டூருக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு - நீர்மட்டம் 80 அடியாக உயர்வு
மேட்டூர்: மேட்டூர் அணைக்கு தொடர்ந்து அதிக அளவில் நீர் வந்து கொண்டிருப்பதால் அணையின் நீர் மட்டம் 80 அடியாக உயர்ந்துள்ளது.
கர்நாடக அணைகள் நிரம்பி வருவதால் அங்கிருந்து பெருமளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்தத் தண்ணீர் மேட்டூர் அணைக்கு வ்நது கொண்டுள்ளது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு விநாடிக்கு 58 ஆயிரத்து 834 கன அடி தண்ணீர் வந்தது. அணையின் நீர் மட்டம் 79.54 அடியாக இருந்தது.
பகல் 12 மணிக்கு 80.03 அடியை எட்டியது. அணைக்கு 57,480 கன அடி வீதம் தண்ணீர் வந்தது.
இன்னும் ஓரிரு நாளில் அணையின் நீர்மட்டம் 90 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னர் பாசனத்திற்காக அணை திறக்கப்படக் கூடும்.
Comments
Story first published: Monday, July 20, 2009, 15:38 [IST]