Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அழகிரி உதவி-பஞ்சாபிலிருந்து மதுரை வந்த உடல்

Subscribe to Oneindia Tamil

மதுரை: பஞ்சாபில் உயிரிழந்தவரின் உடலைக் கொண்டு வர பண வசதி இல்லாமல் தவித்த குடும்பத்தினருக்கு மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உதவிக்கரம் நீட்டி உடலை மதுரை கொண்டு வரச் செய்துள்ளார்.

மதுரை காளவாசல் பல்லவன் நகரை சேர்ந்தவர் தங்கராஜ். இவருடைய மகன் கல்யாணசுந்தரம் (32). இவர் தன்னுடைய மனைவி ஜெயலட்சுமி பிரசவத்திற்காக
பஞ்சாப் மாநிலம் ஜலந்தர், நவாப்ஷெரீப் நகரில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு கடந்த 9-ம் தேதி அழைத்து சென்றார். அங்கு பாம்பு கடித்து கல்யாணசுந்தரம் இறந்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, கல்யாணசுந்தரத்தின் உடலைமதுரைக்கு கொண்டு வர போதுமான வசதியில்லை என்று மத்திய அமைச்சர் மு.க.அழகிரியிடம் கதறி அழுதனர்.

இதனையடுத்து, மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் முயற்சியால் கல்யாணசுந்தரத்தின் உடல் ஜலந்தரில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு விமானம் மூலம் மதுரை கொண்டு வரப்பட்டது.

இந்த நிலையில் கல்யாணசுந்தரத்தின் சாவில் மர்மம் இருப்பதாகவும், அதனால் அவரது உடலை மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று அவரது தந்தை
தங்கராஜ் கரிமேடு காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார்.

இதனை தொடர்ந்து கல்யாணசுந்தரம் உடல் மீண்டும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டது. அங்கு மீண்டும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு போலீசார் முன்னிலையில் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+