குடும்பத்தோடு விஷம் அருந்திய எஸ்ஐ குடும்பம்
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் குடும்ப பிரச்னை காரணமாக எஸ். ஐ சீனிவாசன் என்பவரின் மனைவி தனது இரு குழந்தைகளுடன் விஷம் குடித்தார்.
திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலைங்களில் எஸ்.ஐ- யாக பணியாற்றியவர் சீனிவாசன். இவர் தேனி மாவட்டத்தில் பணியாற்றும் போது, ஒழுங்கு நடவடிக்கை காரணமாக சஸ்பெண்ட் செய்யப் பட்டுள்ளார்.
இந்த நிலையில் திண்டுக்கல் கூட்டுறவு காலனியில் வசித்து வந்த இவரது மனைவி பிலோமினாள் (35), மகள் துர்கா(17), மகன் சூர்யா(6) ஆகியோர் நேற்று விஷம் குடித்தனர்.
இவர்கள் மூன்று பேரும் ஆபத்தான நிலையில் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து திண்டுக்கல் நகர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
போலீசார் விசாரணையில், தனது எதிராலம் குறித்து, தனது தாயார் தவறாக பேசியதால்,மனமுடைந்து இந்த முயற்சியில் ஈடுபட்டதாக பிலோமினாள் வாக்குமூலம் அளித்துள்ளார்.
விபத்து-2 பேர் பலி-21 பேர் காயம்:
திண்டுக்கல் அருகே வேன் மீது லாரி மோதிக் கொண்டதில் பெண் உள்பட இருவர் பலியானார்கள். ஐந்து குழந்தைகள் உட்பட 21 பேர் காயமடைந்தனர்.
கோவை கவுண்டம்பாளையத்தில் இருந்து ஏழு ஆண்கள், பத்து பெண்கள், 5 குழந்தைகள் ராமேஸ்வரத்தில் சுவாமி தரிசனம் செய்ய சுவராஜ் மஸ்தா வேனில்
சென்றனர்.
அந்த வேனின் டீசல் டாங்க்கில் கோளாறு ஏற்பட்டதால் திண்டுக்கல் ராமையன்பட்டி அருகே வேனை ஒர்க் ஷாப்பிற்கு டிரைவர் சந்திரசேகரன் (65) கொண்டு சென்றார்.
அப்போது திண்டுக்கல்லில் இருந்து கேரளாவிற்கு மீன் ஏற்றி சென்ற லாரி மின்னல் வேகத்தில் மோதியது. இதில் வேனில் பயணம் செய்த கோவை சிங்காநல்லூரை சேர்ந்த லிங்கம்மாள் (55), சவுந்திரராஜன் (52) ஆகியோர் மருத்துவமனைக்குக் கொண்டு வரும் வழியில் இறந்தனர்.
இதே பகுதியை சேர்ந்த ஆனந்தக்குமார் (32), விஜயலட்சுமி (25), பொன்னுச்சாமி (55), நவீன்குமார்(10), கிஷார் (25) உட்பட 21 பேர் படு காயமடைந்தனர்.
இதில் பிரியதர்ஷினி(2), கவிதர்ஷினி (1 ) உள்பட ஐந்து குழந்தைகளை திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .
இவர்களை கலெக்டர் வள்ளலார், எஸ்.பி. சின்னசாமி ஆகியோர் பார்வையிட்டு ஆறுதல் கூறினர்.












Click it and Unblock the Notifications