ஆல்கஹால் சோதனை-மாட்டிய 29 பைலட்டுகள்!
டெல்லி: ஆல்கஹால் சோதனையில் 29 விமானிகள் மது அருந்திவிட்டு விமானங்களை இயக்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. குறிப்பாக சாராய அதிபர் விஜய் மல்லையாவின் கிங்பிஷர் நிறுவனத்தைச் சேர்ந்த பைலட்டுகளே இதில் அதிகமானவர்கள்.
விமானத்தில் ஏறும் முன் அதனை இயக்கும் விமானிகளுக்கு ஆல்கஹால் செய்யப்படுவது இப்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 29 பைலட்டுகள் குடித்துவிட்ட விமானம் ஓட்ட வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இவர்களில் 8 பைலட்டுகள் சாராய அதிபரான விஜய் மல்லையா நடத்தும் கிங்பிஷர் நிறுவன விமானங்களில் பணியாற்றுபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்டிகோ மற்றும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் தலா 6 பைலட்டுகளும் இந்த ஆல்கஹால் சோதனையில் மாட்டிக் கொண்டுள்ளனர்.
ஜெட் நிறுவனத்தின் 6 பைலட்டுகள் மற்றும் பாரமவுண்ட் விமானத்தின் 3 பைலட்டுகளும் குடித்துவிட்டு பணிக்கு வந்துள்ளனர்.
குடித்து விட்டு பணிக்கி வரும் விமானிகள் அடுத்த ஆறு வாரங்களுக்கு விமானமே ஓட்டக்கூடாது என விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டும், குடிப்பது தொடர்கிறது.
மாட்டிக் கொண்ட விமானிகள் அனைவரும் 6 வாரகாலம் விமானங்களை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்று மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரபுல் பட்டேல் தெரிவித்தார்.