சட்டசபை-ஒரே நாளில் 30 சட்டங்கள்
சென்னை: சட்டசபையில் நேற்று ஒரே நாளில் 30 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இதையடுத்து தேதி குறிப்பிடப்படாமல் பேரவை ஒத்திவைக்கப்பட்டது.
சட்டசபையின் 11வது கூட்டத் தொடர் ஜூன் 17ம் தேதி தொடங்கியது. ஜூலை 21ம் தேதியான நேற்று முடிவடைந்தது.
கடைசி நாளான நேற்று சட்டசபை கூட்டம் பிற்பகலிலும் நடந்தது.
அப்போது திருமணங்கள் பதிவு சட்டம், ஜல்லிக்கட்டை முறைப்படுத்த சட்டம், பள்ளி கட்டணங்களை முறைப்படுத்தும் சட்டம் என மொத்தம் 31 சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. இதில் காவல்துறை சட்டம் தவிர மற்ற 30 சட்டங்களும் நிறைவேற்றப்பட்டன.
பின்னர் தேதி குறிப்பிடப்படாமல் பேரவை ஒத்திவைக்கப்பட்டது. இதற்கான தீர்மானத்தை துணை முதல்வர் ஸ்டாலின் கொண்டு வர குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
இந்தக் கூட்டத் தொடரில் பால் உற்பத்தியாளர்கள், பயிற்சி மருத்துவர்கள், சத்துணவுப் பணியாளர்கள் ஆகியோரின் போராட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.
முதல்வர் கருணாநிதியின் துறைகள் மீதான மானியக் கோரிக்கைகளுக்கு துணை முதல்வர் ஸ்டாலினும், நிதியமைச்சர் க.அன்பழகனும் பதில் அளித்தனர்.
பல்வேறு பிரச்னைகள் காரணமாக அதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் பேரவையில் இருந்து வெவ்வேறு சம்பவங்களில் வெளியேற்றப்பட்டனர். பாமக, மதிமுக ஆகியவை பலமுறை வெளிநடப்பு செய்தன.
மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் மீது உரிமை மீறல் பிரச்னை கொண்டு வரப்பட்டு, வாபஸ் பெறப்பட்டது.
இந்தக் கூட்டத் தொடரில் ஒரு நாள் கூட சட்டசபை நிகழ்ச்சிகளில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications