தி.க. நடத்திய சூரிய கிரகண சிற்றுண்டி விருந்து!

மக்களிடம் அறியாமையை போக்குவதற்காக இந்த நிகழ்ச்சியை திராவிட கழகம் ஏற்பாடு செய்திருந்தது.
இன்று காலை சூரிய கிரகணம் நிகழ்ந்தபோது தமிழ்நாடு முழுவதும் திராவிடர் கழகத்தினர் நடத்திய இந்த விருந்தில் ஆயிரக்கணக்கானோர் சிற்றுண்டி அருந்தினர்.
சென்னையில் வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் இன்று காலை 6.15 மணிக்கு நடந்த விருந்து நிகழ்ச்சியில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கி சிற்றுண்டி சாப்பிட்டார்.
அதே போல வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம், பாலிடெக்னிக், திருச்சி கல்வி வளாகம், ஜெயங்கொண்டம் பெரியார் மேல்நிலைப்பள்ளி ஆகிய தி.க நடத்தும் கல்விக் கூடங்களிலும் இன்று சூரிய கிரகணத்தின்போது மாணவ- மாணவிகள் திறந்த வெளியில் சிற்றுண்டி சாப்பிட்டனர்.
குமரியில்..
அதே போல சூரிய கிரகணத்தின்போது சாப்பிட கூடாது என்று கூறுவது தவறு என்பதை உணர்த்து வகையில் சுற்றுலா பயணிகள் சாப்பிட அறிவியல் இயக்கம் சார்பில் கன்னியாகுமரியில் கேக், பிஸ்கட்கள் வழங்கப்பட்டன. இதை நூற்றுக்கணக்கான மக்கள் மகிழ்ச்சியோடு வாங்கி உண்டனர்.












Click it and Unblock the Notifications