காந்தி சிலைக்கு கறுப்பு துணி-வாயில் நோட்டு!
திண்டிவனம்: திண்டிவனத்தி்ல் காந்தி சிலையின் கண்கள் மீது கறுப்பு-சிவப்பு துணி கட்டப்பட்டு, வாயில் 10 ரூபாய் ஒட்டப்பட்டு அவமரியாதை செய்யப்பட்டிருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டிவனம் நகராட்சி அலுவலகம் எதிரே மகாத்மா காந்தி சிலை உள்ளது. இன்று காலை இந்த சிலையின் கண்களி்ல் கறுப்பு-சிவப்பு துணி கட்டப்பட்டு, சிலையி்ன் வாயில் 10 ரூபாய் நோட்டு ஒட்டப்பட்டிருந்தது.
அதன் அருகே வைக்கப்பட்டிருந்த ஒரு பேனரில் காங்கிரஸ் தலைவர் சோனியா நோட்டுக் குவியலில் அமர்ந்திருப்பது போலவும் முதல்வர் கருணாநிதி மற்றும் பலர் வரிசையில் சென்று அந்தப் பணத்தைப் பெறுவது போலவும் படம் ஒட்டப்பட்டிருந்தது.
மேலும் அதன் அருகே அருகே ''ஜனநாயக நாட்டில் பணநாயகத் தேர்தல். காந்தி போட்ட நோட்டுக்கு வரப் போகிறது தேர்தல். புறக்கணிப்போம்.. புறக்கணிப்போம்'' என்றும் எழுதப்பட்டிருந்தது.
போலீசார் விரைந்து வந்து கறுப்பு, சிவப்பு துணியை அகற்றி, மகாத்மாவின் சிலையில் ஒட்டப்பட்ட 10 ரூபாயையும் அகற்றி, பேனரையும் அகற்றினர்.
தகவல் அறிந்ததும் காங்கிரசார் அங்கு திரண்டு வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கலைந்து போகச் செய்தனர்.
இந்தச் செயலை செய்தவர்கள் குறித்து விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications