அது நகை வியாபாரி சுரேஷ் மண்டை ஓடு அல்ல!
சென்னை: சென்னை மண்ணடி தம்பு செட்டி தெருவில் குப்பை மேட்டில் இரண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் கிடைத்த மண்டை ஓடு, துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்யப் பட்ட நகை வியாபாரி சுரேஷ் குமாரின் தலை அல்ல என்று தெரியவந்துள்ளது.
கொடுங்கையூரைச் சேர்ந்த சுரேஷ்குமார் (42) நகைகளை வாங்கி, விற்கும் தொழில் செய்து வந்தார். கடந்த மாதம் 6ம் தேதி இவர் மாயமானார். மறுநாள் காலை சூளை பெரியமேடு அருகே பாலித்தீன் பையில் அவரது இரண்டு கைகளும், சென்ட்ரல் ரயில் நிலையத்தையொட்டிய வால்டாக்ஸ் சாலையில் அவரது இரு கால்களும் கிடந்தன. பூக்கடை என்எஸ்சி போஸ் ரோடு அருகே உடல் பகுதி கிடந்தது. ஆனால், தலை மட்டும் சிக்கில்லை.
இந் நிலையில் கடந்த 19ம் தேதி தம்புசெட்டி தெருவில் குப்பைமேட்டில் பிளாஸ்டிக் பையில் மண்டை ஓடு கிடந்தது. இந்த மண்டை ஓடு குறுக்கு வாட்டில் அறுக்கப்பட்டிருந்தது.
சுரேஷ்குமாரின் தலையை 2 துண்டாக வெட்டி ஆசிட்டில் போட்டு சதை பகுதிகளை அழுக வைத்து மண்டை ஓட்டை தனியாக பிரித்து தெருவில் வீசியுள்ளனர் கொலையாளிகள் என்று போலீசார் கூறி வந்தனர்.
இந்த மண்டை ஓடு பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மண்டை ஓட்டின் வயது உள்பட அனைத்து ஆய்வுகளையும் மேற்கொண்டனர். இதில் மண்டை ஓடு சுரேஷ் குமாருடையதாக இருக்க வாய்ப்பில்லை என்று தெரியவந்துள்ளது.
இது பல ஆண்டுகளுக்கு முந்தைய பழைய மண்டை ஓடாக இருக்கலாம் என்றும், 50 வயதுக்கு மேல் உள்ள ஆணின் மண்டை ஓடு என்றும், பற்கள் சிதிலடைந்து காணப்படுவதால் இது சமீபத்தில் இறந்தவரது தாடை பகுதியாக இருக்க வாய்ப்பில்லை என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
மண்டை ஓட்டில் பளபளப்புக்காக ரசாயனம் பூசப்பட்டுள்ளதால் இது கல்லூரி லேபில் இருந்த மண்டை ஓடாக இருக்கலாம் என்று கூறுகின்றர் டாக்டர்கள்.
இதனால் சுரேஷ் குமார் கொலை வழக்கில் போலீசாருக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
-
சிலிண்டர் வரலை! ஆப்பம்லாம் பிறகு பார்ப்போம்! Variety rice கிடையாது! சென்னை ஆனந்தா ஹோட்டல் அறிவிப்பு -
கிண்டி மேம்பாலத்தில் கைமாறிய 1.5 கிலோ தங்கம்.. சென்னை ஜிஎஸ்டி ஆபீசர் யாருனு பார்த்தால்? செம ட்விஸ்ட் -
கூடுவாஞ்சேரியில் நள்ளிரவில் நடந்த தீவிபத்து! ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உடல் கருகி பலி! -
சொத்து வரியின் பயன்கள்.. இது எப்படி கணக்கிடப்படுகிறது? வரி கட்டாவிட்டால் ஜப்தி வருமா? அறியாத தகவல் -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. குமரி, நீலகிரியில் இன்று விட்டு விளாசப் போகுது மழை! வானிலை மையம் ஜில் அப்டேட்! -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
கோடிக்கணக்கில் சொத்து சேர்த்தாலும் சிக்கல் வராது.. ஆனால் இந்த ஒரு விஷயத்தை மட்டும் மறக்காதீங்க! -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை.. சென்னையிலேயே பணியிடம்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்! விட்றாதீங்க -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு!











Click it and Unblock the Notifications