Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரூ. 2500 கோடி அரிசி ஊழல்!-சிக்கலில் மத்திய அரசு

Subscribe to Oneindia Tamil

Rice
டெல்லி: அரிசி ஏற்றுமதி என்ற பெயரில் ரூ. 2500 கோடி அளவுக்கு மிகப் பெரிய ஊழல் நடந்துள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா ராஜ்யசபாவில் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவுட்லுக் இதழ் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது...

கடந்த 2008ம் ஆண்டு முதல் 21 ஆப்பிரிக்க நாடுகளுக்கு இந்தியாவின் பாஸ்மதி அல்லாத அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. உண்மையில் இந்த அரிசியை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது. ஆனால் அதையும் மீறி அரிசி ஏற்றுமதி நடந்துள்ளது.

மனிதாபிமான அடிப்படையில், தனியார் ஏற்றுமதியாளர்களுக்கு அரிசி ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்தது. இந்த அனுமதியை வர்த்தகத் துறையும், மத்திய உணவு அமைச்சகமும் வழங்கியுள்ளன.

இந்த அரிசி அனைத்தும் தென் ஆப்பிரிக்கா, நைஜீரியா உள்ளிட்ட 21 ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதியாகியுள்ளன.

இந்த அரிசி ஏற்றுமதியை, இந்திய உணவு கார்ப்பரேஷன் மூலமாக மேற்கொள்ளாமல், தனியார் நிறுவனம் ஒன்றின் மூலம் மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் அந்த நிறுவனம் கொளுத்த லாபத்தை சந்தித்துள்ளது. மத்திய அரசுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சியாரோ லியோனுக்கு அனுப்பப்பட்ட அரிசி, ஸ்விஸ் நாட்டைச் நோவல் என்ற நிறுவனம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது சியாரோ லியோன் மூலம் சுவிஸ் நாட்டுக்கு இந்த அரிசி போயுள்ளது.

அதேபோல அரிசி விளைச்சல் அமோகமாக நடந்துள்ள நைஜீரியா நாட்டுக்கு 1 லட்சத்து 17 ஆயிரம் டன் அரிசியை அனுப்பியுள்ளனர். அந்த அரிசியை வேண்டாம் என்று நைஜீரியா கூறியுள்ளது.

இதையடுத்து அங்கிருந்து தென் ஆப்பிரிக்காவுக்கு அந்த அரிசி திருப்பி விடப்பட்டுள்ளது.

இது அப்பட்டமான அரிசி கடத்தலாகும். அதாவது ஆப்பிரிக்க நாடுகளுக்கு அரிசியை அனுப்பி அந்த அரிசியை அங்கிருந்து வேறு நாடுகளுக்கு கொண்டு போயுள்ளனர். சர்வதேச சந்தையில் மிகப் பெரிய விலை வைத்து விற்றுள்ளனர் என்று கூறியுள்ளார் டி.ராஜா.

இந்தப் புகார் குறித்து விவசாயத்துறை அமைச்சர் சரத் பவார் கருத்து கூற மறுத்துள்ளார்.

மேலும், அப்போதைய வர்த்தகத்துறை அமைச்சர் கமல்நாத்தும் பதிலளிக்க மறுத்துள்ளார்.

விரைவில் இந்த அரிசி விவகாரம், ஸ்பெக்ட்ரம் ஊழலை விட மிகப் பெரிய அளவில் வெடித்து மத்திய அரசுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+