ரூ. 2500 கோடி அரிசி ஊழல்!-சிக்கலில் மத்திய அரசு

இதுதொடர்பாக அவுட்லுக் இதழ் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது...
கடந்த 2008ம் ஆண்டு முதல் 21 ஆப்பிரிக்க நாடுகளுக்கு இந்தியாவின் பாஸ்மதி அல்லாத அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. உண்மையில் இந்த அரிசியை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது. ஆனால் அதையும் மீறி அரிசி ஏற்றுமதி நடந்துள்ளது.
மனிதாபிமான அடிப்படையில், தனியார் ஏற்றுமதியாளர்களுக்கு அரிசி ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்தது. இந்த அனுமதியை வர்த்தகத் துறையும், மத்திய உணவு அமைச்சகமும் வழங்கியுள்ளன.
இந்த அரிசி அனைத்தும் தென் ஆப்பிரிக்கா, நைஜீரியா உள்ளிட்ட 21 ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதியாகியுள்ளன.
இந்த அரிசி ஏற்றுமதியை, இந்திய உணவு கார்ப்பரேஷன் மூலமாக மேற்கொள்ளாமல், தனியார் நிறுவனம் ஒன்றின் மூலம் மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் அந்த நிறுவனம் கொளுத்த லாபத்தை சந்தித்துள்ளது. மத்திய அரசுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சியாரோ லியோனுக்கு அனுப்பப்பட்ட அரிசி, ஸ்விஸ் நாட்டைச் நோவல் என்ற நிறுவனம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது சியாரோ லியோன் மூலம் சுவிஸ் நாட்டுக்கு இந்த அரிசி போயுள்ளது.
அதேபோல அரிசி விளைச்சல் அமோகமாக நடந்துள்ள நைஜீரியா நாட்டுக்கு 1 லட்சத்து 17 ஆயிரம் டன் அரிசியை அனுப்பியுள்ளனர். அந்த அரிசியை வேண்டாம் என்று நைஜீரியா கூறியுள்ளது.
இதையடுத்து அங்கிருந்து தென் ஆப்பிரிக்காவுக்கு அந்த அரிசி திருப்பி விடப்பட்டுள்ளது.
இது அப்பட்டமான அரிசி கடத்தலாகும். அதாவது ஆப்பிரிக்க நாடுகளுக்கு அரிசியை அனுப்பி அந்த அரிசியை அங்கிருந்து வேறு நாடுகளுக்கு கொண்டு போயுள்ளனர். சர்வதேச சந்தையில் மிகப் பெரிய விலை வைத்து விற்றுள்ளனர் என்று கூறியுள்ளார் டி.ராஜா.
இந்தப் புகார் குறித்து விவசாயத்துறை அமைச்சர் சரத் பவார் கருத்து கூற மறுத்துள்ளார்.
மேலும், அப்போதைய வர்த்தகத்துறை அமைச்சர் கமல்நாத்தும் பதிலளிக்க மறுத்துள்ளார்.
விரைவில் இந்த அரிசி விவகாரம், ஸ்பெக்ட்ரம் ஊழலை விட மிகப் பெரிய அளவில் வெடித்து மத்திய அரசுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.
-
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ! -
ஏடிஎமில் கேட்டது ரூ.10,000.. கிடைச்சது ரூ.3 லட்சம்! ஆனாலும் வாடிக்கையாளர் பயங்கர சோகம்! ஏன் தெரியுமா -
சீனாவில் தமிழருக்கு கிடைத்த மிக முக்கிய உயர் பொறுப்பு.. யார் இந்த விக்ரம் துரைசாமி! -
சீனா வேண்டாம்.. நடுக்கடலில் இந்தியாவை நோக்கி திரும்பிய 7 ரஷ்யா ஆயில் கப்பல்கள்! என்ன நடந்தது? -
வங்கியில் நடக்கும் "சில" விஷயங்கள்.! HDFC வங்கி தலைவர் திடீர் ராஜினாமா! லெட்டரில் சொன்ன பரபர மேட்டர் -
"முடியல.. கஷ்டமா இருக்கு.." பீகாரின் நிலைமை பார்த்து கண்ணீர் விட்டு கதறிய வெளிநாட்டு பெண் -
"சுங்க கட்டணம் 2 மடங்கு செலுத்தணும்.." அமலுக்கு வரும் புதிய பாஸ்டேக் ரூல்ஸ்.. ரொம்ப முக்கியம்! -
"இந்தியாவுக்கே ஆபத்து.." தீவிரவாத கும்பலுடன் இருந்த அமெரிக்கரை சைலண்டாக தூக்கிய என்ஐஏ.. யார் இவர்? -
"ஐ லவ் யூ" சொல்வது பாலியல் தொல்லை தான்.. போக்சோ வழக்கில் உயர்நீதிமன்றம் மிக முக்கிய கருத்து -
ஈரானுக்கு அள்ளிக்கொடுக்கும் இந்தியா.. போருக்கு நடுவே மருத்துவ உதவிகள்.. நீங்களும் நன்கொடை கொடுக்கலாம் -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான்












Click it and Unblock the Notifications