For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கணவர் மரணம்-மனைவி தீக்குளித்து தற்கொலை

By Staff
Google Oneindia Tamil News

திருச்சி: திருச்சி மாவட்டம், தா.பேட்டை அருகே கணவர் இறந்த துக்கம் தாளாமல் அவரது மனைவி தீ குளித்துத் தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி மாவட்டம், தா.பேட்டை அருகில் உள்ளது பெருகனூர். இந்த ஊரைச் சேர்ந்தவர் பழனியாண்டி மகன் கார்த்திக் (27). லாரி ஓட்டுனர். இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த மேகலாவுக்கும் (23) கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.இவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில், கேரளத்துக்கு சரக்கு ஏற்றிச் சென்ற கார்த்திக், கடந்த திங்கள்கிழமை அன்று லாரியில் மின் கம்பி உரசியதில் மின்சாரம் பாய்ந்து அங்கேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து, உயிரிழந்த கார்த்திக் உடல் பெருகனூருக்குக் கொண்டு வரப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டது. கணவர் இறந்த துக்கம் தாளாமல் மனமுடைந்த நிலையில் இருந்த அவரது மனைவி
மேகலா, செவ்வாய்க்கிழமை இரவு தனது உடலில் கிரேசினை ஊற்றி தீக்குளித்தார்.

இதை அறிந்த அவரது உறவினர் துரைசாமி மேகலாவைக் காப்பாற்ற முயன்றார். அப்போது அவரும் பலத்த தீக்காயத்தில்சிக்கினார்.

அவர்கள் இருவரும், நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு, சிகிச்சைபலனின்றி மேகலா உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து தா.பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X