ரூ. 15,560 கோடியிலான 15 சாலைத் திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி
பப்ளிக் - பிரைவேட் ஒத்துழைப்பு (பிபிபி) மூலம் இந்தத் திட்டங்கள் நிறைவேற்றப்படும். மொத்தம் 11 மாநிலங்களில் இந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன.
இதுதொடர்பான அனுமதியை மத்திய நிதித்துறை செயலாளர் அசோக் சாவ்லா தலைமையிலான அரசு மற்றும் தனியார் ஒத்துழைப்பு திட்ட அனுமதிக் கமிட்டி வழங்கியுள்ளது.
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக கோவாவில் பிஓடி முறையில், தேசிய நெடுஞ்சாலை 17ல், ரூ. 2078 கோடி மதிப்பில் 4 மற்றும் 6 வழிச் சாலைகள் அமைக்கப்படும்.
மகாராஷ்டிர மாநிலத்தில், புனே - சதாரா பிரிவில் தேசிய நெடுஞ்சாலை 4ல் 6 வழிப் பாதை ரூ. 1724 கோடி செலவில் உருவாக்க்படும்.
குஜராத் மாநிலத்தில், சமகியாலி - காந்திதாம் பிரிவில் ரூ. 805 கோடி மதிப்பில் புதிய 6 வழிப் பாதை உருவாக்க்படும்.
இதேபோல ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், ஹரியானா, உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம், மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் மீதம் உள்ள திட்டங்கள் நிறைவேற்றப்படவுளளன.
இந்தப் பட்டியலில் தமிழ்நாடு இடம் பெறவிலலை என்பது குறிப்பிடத்தக்கது.