டெல்லி-மும்பை விமானத்தில் பீதி-கடத்த முயன்ற 'தீவிரவாதி'!

ஆனால், அவர் மீது பாய்ந்த பிற பயணிகள் அவரை அடக்கினர். விமானம் தரையிறங்கியதும் போலீசார் அவரிடம் விசாரணையில் அவர் மன நலம் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
டெல்லியிலிருந்து விமானம் கிளம்பிய ஒன்றரை மணி நேரத்தில் சஞ்சய் மாலிக் (30) என்ற பயணி எழுந்து தன்னிடம் இருந்த ஒரு ஜூஸ் பாக்கெட்டை தனது கர்ச்சீப்பால் சுற்றிக் கொண்டு அது ஒரு வெடிகுண்டு என்றும், விமானத்தைக் கடத்தப் போவதாகவும் நான் ஒரு பாகிஸ்தான் தீவிவராதி என்றும் கத்தினார்.
இதைப் பார்த்து பீதியடைந்த பிற பயணிகள் அவர் மீது பாய்ந்து அப்படியே அமுக்கினர். பின்னர் அவரிடம் விமான சிப்பந்திகள் பேசி அமைதிப்படுத்திவிட்டு கையிலிருந்த பாக்கெட்டை வாங்கினர். அது வெறும் ஜூஸ் பாக்கெட் தான்.
இது குறித்து பைலட் விமானக் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தரவே விமான நிலையத்தில் போலீசார் தயார் நிலையில் வைக்கப்பட்டனர்.
விமானம் தரையிறங்கியதும் அவரை போலீசார் விமானத்துக்குள் வந்து இழுத்துச் சென்று விசாரணை நடத்தினர். இவனிடம் நடத்தப்பட்ட ஆரம்பகட்ட விசாரணையில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.












Click it and Unblock the Notifications