ஏழைகளுக்கே வீடே இல்லாதபோது எம்.எல்.ஏக்களுக்கு வீட்டு மனை தேவையா? - சிபிஎம் விமர்சனம்
சென்னை: ஏழை மக்கள் குடியிருக்க ஒரு வீட்டு மனை இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கும்போது எம்.எல்.ஏக்களுக்கு வீட்டு மனை வழங்கும் திட்டம் தேவையற்ற ஒன்று. அதை காங்கிரஸார் கோரியிருப்பது கண்டித்தக்கது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் வரதராஜன் கூறியுள்ளார்.
இதுகுறித்து வரதராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை:
பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான ஊதிய உயர்வு மற்றும் இதர சலுகைகளை, அந்தந்த அவைகளே முடிவு செய்து செயல்படுத்துவது ஆரோக்கியமான மரபு அல்ல என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தொடர்ந்து சுட்டிகாட்டி வந்துள்ளது.
தற்போது தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரின் முடிவில் எம்.எல்.ஏ.க்களுக்கு ரூ.50 ஆயிரம் ஊதியம், முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கு ரூ.10 ஆயிரம் ஊதியம் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு வீட்டுமனை உள்ளிட்ட சலுகைகளை வழங்குவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.
இது தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் தங்களது சொந்த நலம் குறித்த முடிவுகளைத் தாங்களாகவே எடுத்து வழங்கிக் கொள்கிறார்கள் என்ற தவறான கருத்தை மக்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.
எம்.எல்.ஏ.க்களுக்கு வீட்டுமனை என்ற கோரிக்கை சட்டமன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவரால் முன்வைக்கப்பட்டபோது, அதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உறுப்பினர்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான ஏழை, எளிய குடும்பங்கள் வீட்டு மனைப்பட்டா ஒதுக்கக் கோரி மனுகொடுத்து ஏங்கி நிற்கையில், அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு முனையாமல், எம்.எல்.ஏ.க்களுக்கு வீட்டுமனை வழங்க முன்னுரிமை கொடுத்திருப்பது முறையற்ற முடிவு.
ஏற்கனவே அனைத்து கட்சி உறுப்பினர்களும் ஏகமனதாக கோரிக்கை விடுத்தால் மட்டுமே பரிசீலிக்கப்படும் என்று அறிவித்திருந்த முதல்-அமைச்சர், இப்போது அதை மாற்றி 100 எம்.எல்.ஏ.க்களுக்கு குறையாமல் கோரினாலே அது ஏற்கப்படும் என்று நிலை எடுத்தது சரியன்று.
ஆளும் கூட்டணியான தி.மு.க., காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மட்டும் சேர்ந்து கோரிக்கை விடுத்தாலே அது 100 என்ற எண்ணிக்கையைத் தாண்டிவிடும் என்பதாலேயே இந்த மாற்றம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த முடிவை மாநில அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். மக்கள் பிரதிநிதிகள் சொந்தக் கோரிக்கைகளை விடுத்து மக்கள் கோரிக்கைகளை முன்வைத்து செயலாற்றுவதே சாலச் சிறந்தது.
சட்டமன்ற உறுப்பினர்களின் ஊதியம் உள்ளிட்ட சலுகைகளைக் குறித்து ஆய்வு செய்து அரசுக்குப் பரிந்துரை செய்ய நீதிபதி ஒருவர் தலைமையில், தலைமைச் செயலாளர், நிதித்துறை செயலாளர், அவை முனைவர், எதிர்க்கட்சித்தலைவர் போன்றோரைக் கொண்ட குழு அமைத்து முடிவுகள் எடுப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக கடல் பகுதியில் காணாமல் போகும் மீனவர்களை கண்டுபிடிப்பதற்காக இந்திய-இலங்கை கூட்டு ஏற்பாட்டில் இலங்கை கடல் பகுதியில் உள்ள தீவுப்பகுதிவரை சென்று தேடும் வகையில் நிரந்தரமாக 3 படகுகளை இந்திய அரசே ஏற்பாடு செய்யவேண்டும்.
இறந்த அல்லது கடலில் மூழ்கிக் காணாமல் போன மீனவர் குடும்பங்களுக்கு தமிழக அரசு அதிகபட்சமாக ரூ.5 லட்சம் நிதியாகவும், அக்குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கிட வேண்டும் என்று கூறியுள்ளார் வரதராஜன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications