யுஎஸ்-சிறுமிக்கு செக்ஸ் வலை வீசிய இந்தியர் கைது
நியூயார்க்: இன்டர்நெட் மூலம் சிறுமிகளுக்கு செக்ஸ் வலைவீசியதாக இந்தியாவைச் சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினியர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பென்சில்வேனியாவில் பணியாற்றி வரும் நித்யானந்த் கோபாலிகா (30) என்ற ஆந்திர வாலிபர் இன்டர்நெட்டில் பல்வேறு சேட் ரூம்களில் சென்று சிறுமிகளுக்கு வலை வீசியுள்ளார்.
வழக்கமாக சேட் ரூம்களை கண்காணிக்கும் அமெரிக்க உளவுப் பிரிவினர் இது குறித்து பென்சில்வேனியா போலீசாருக்கு தகவல் தரவே அவருடன் Child Predator Unit என்ற சிறார் பாலியல் வதை தடுப்புப் பிரிவைச் சேர்ந்த ஒரு போலீஸ்காரர் தன்னை பிட்ஸ்பர்க்கைச் சேர்ந்த சிறுமி என்று அறிமுகப்படுத்திக் கொண்டு சேட் செய்ய ஆரம்பித்தார். இந்த உரையாடல் பல நாட்கள் நீடித்தது.
அப்போது அந்த 'சிறுமியிடம்' செக்ஸ் அனுபவங்கள் குறித்தெல்லாம் விலாவாரியாகப் பேசிய நித்யானந்த், அவரை சந்திக்க விரும்புவதாகவும் உறவு வைத்துக் கொள்ளவும் அழைத்துள்ளார்.
மேலும் வெப் கேமராவுக்கு முன் நிர்வாணமாக நின்றபடி சில கேவலமான செயல்களைச் செய்து அதை லைவ் ஆகவும் அந்த 'சிறுமிக்கு' ஒளிபரப்பினார் நித்யானந்த்.
இதையடுத்து அவரை ஒரு இடத்துக்கு வரச் சொன்னார் 'சிறுமி'. அதை நம்பி அங்கு சென்ற நித்யானந்தை போலீசார் கைது செய்தனர்.
அவரது காரிலிருந்து டிஜிட்டல் கேமரா, லேப்டாப், செல்போன், காண்டம்களும் கைப்பற்றப்பட்டன. இப்போது பட்லர் கவுண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நித்யானந்த் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
இவர் மீதான சிறால் பாலியல் கொடுமைப் பிரிவு வழக்கு நிரூபி்க்கப்பட்டால் 20 ஆண்டுகள் வரை சிறையில் தள்ள முடியும்.