For Daily Alerts
Just In
குளோரைடு தட்டுப்பாடு-300 தீப்பெட்டி ஆலைகள் மூடல்
கோவில்பட்டி: குளோரைடு தட்டுப்பாடு, தடை போன்ற காரணங்களால் கோவில்பட்டி பகுதியில் உள்ள 300 க்கும் மேற்பட்ட தீப்பெட்டி ஆலைகள் மூடப்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர்.
சிவகாசி, கோவில்பட்டி , விருதுநகர் போன்ற பகுதிகளில் தீப்பெட்டி
உற்பத்தி அதிக அளவில் செய்யப்படுகின்றது.
தீப்பெட்டி உற்பத்திக்கு தேவையான மூலப்பொருளான குளோரைடுக்கு கடந்த சில மாதங்களாக கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு்ள்ளது.
இதனால் கோவில்பட்டி, கழுகுமலை உள்ளிட்ட தீப்பெட்டி ஆலைகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.
மேலும் தீப்பெட்டி சார்ந்த பிற தொழில்களில் உள்ள பல ஆயிரம் பேரும் வேலையின்றி தினறி வருகின்றனர்.
Story first published: Saturday, July 25, 2009, 13:17 [IST]