தமிழகத்தில் 9 புதிய தாலுகாக்கள்!
கன்னியாகுமரி: தமிழகத்தில் 9 புதிய தாலுகாக்கள் உருவாக்கப்படவுள்ளன.
தமிழக வருவாய் மற்றும் வீட்டு வசதித்துறை அமைச்சர் பெரியசாமி கன்னியாகுமரியில் நிருபர்களிடம் பேசுகையில்,
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 9 புதிய தாலுகாக்களை உருவாக்கப்படும்.
நிலமற்ற ஏழை-எளிய விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் வழங்கும் திட்டத்தின்கீழ் இதுவரை 2.10 லட்சம் ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 1.68 லட்சம் ஏழை விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை 6.20 லட்சம் பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.
சுனாமியால் பாதிக்கப்பட்ட 13 கடலோர மாவட்டங்களில் அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் இதுவரை 52,000 வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
பெரம்பலூர், அரியலூரில் கலெக்டர் அலுவலகம் கட்டுவதற்கான பணி நடைபெற்று வருகிறது. சேலம் கலெக்டர் அலுவலகத்தில் ரூ.25 கோடியில் கூடுதல் கட்டிடம் கட்டப்படும்.
எம்எல்ஏக்கள் சென்னையில் வீட்டும னை கேட்டு கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து முதல்வர் பரிசீலித்துக் கொண்டிருக்கிறார் என்றார்.