மதுரையில் திமுகவினர் கோஷ்டி மோதல்-அலுவலகம், கார் மீது தாக்குதல்

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரையில் திமுகவினரிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 25வது வார்டு மாநகராட்சி உறுப்பினரின் அலுவலகம், வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

மதுரை ஆரப்பாளையம் 26-வது வார்டு திமுக கிளை செயலாளராக இருப்பவர் சீனி ரமேஷ். இவருக்கும் அப்பகுதியைச் சேர்ந்த பிச்சைக்கிளி, துரை ஆகியோருக்கும் இடையே
முன்விரோதம் இருந்துள்ளது.

25-வது வார்டு மாமன்ற திமுக உறுப்பினர் அருண்குமார் இரு தரப்பையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். அப்போது, அவர் ஒருதரப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந் நிலையில் நள்ளிரவில் சீனி ரமேஷ் ஆதரவாளர்களான ராஜ்கமல்,ராஜசேகரன், காசிவிஸ்வநாதன், பாண்டி, பாரி, மணி ஆகியோர் அருண்குமார் அலுவலகத்திற்குச் சென்று திடீர் தாக்குதல் நடத்தி அவரது அலுவலகத்தை
அடித்து நொறுக்கினர்.

இதில் அவரது வாகனமும் உடைக்கப்பட்டது. அங்கிருந்த ஆட்டோவும், இரு சக்கர வாகனமும் உடைக்கப்பட்டன.

இது குறித்து அருண்குமாரின் வாகன ஓட்டுனர் பிச்சைப்பாண்டி கரிமேடு காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் சீனி ரமேஷ் ஆதரவாளர்கள் மீது போலீசார் தீண்டாமைப் பிரிவு
உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இதையடுத்து, ராஜ்கமல், ராஜ சேகரன், காசிவிஸ்வநாதன் ஆகியோரை கைது செய்தனர். மேலும், மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+