இலங்கை தூதரை மறித்து பெரியார் தி.க. போராட்டம்
சென்னை: இலங்கை துணைத் தூதர் பி.எம். அம்ஸாவின் காரை தடுத்து நிறுத்தி பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸ் பாதுகாப்புடன் அம்ஸா பின்னர் அழைத்துச் செல்லப்பட்டார்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான இலங்கைப் படையினரின் போரின்போது, இலங்கை அரசுக்கும், இந்திய அரசுக்கும் இடையே பாலம் போல செயல்பட்டார் அம்ஸா. இதைப் பாராட்டும் வகையில் அவரை லண்டன் துணைத் தூதராக மாற்றியுள்ளது இலங்கை அரசு.
இதையடுத்து அவருக்கு ஆந்திர வர்த்தக சபை சார்பில் நேற்று மாலை பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் அம்ஸா கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியை முடித்து விட்டு வெளியே வந்த காரில் ஏறியபோது அங்கு பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள் திரண்டு வந்து காரை வழிமறித்து நிறுத்தினர்.
அம்ஸாவுக்கு எதிராகவும், இலங்கை இனப்படுகொலைக்கு எதிராகவும் அவர்கள் கோஷமிட்டனர். கிட்டத்தட்ட அரை மணி நேரம் இந்த முற்றுகை நீடித்தது. இதனால் அம்ஸாவால் செல்ல முடியவில்லை.
இதையடுத்து போலீஸாரும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும், தலையிட்டு பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்களை சமரசப்படுத்த முயன்றனர். ஒரு வழியாக போராட்டத்தை கைவிட்ட பெரியார் திராவிடர் கழகத்தினர் பின்னர் அங்கிருந்து அகன்றனர்.
இதையடுத்து அம்ஸா அங்கிருந்து பாதுகாப்புடன் புறப்பட்டுச் சென்றார். இந்த அமளியில் அம்ஸாவின் கார் லேசாக சேதமடைந்தது.
இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்ய வேண்டாம் என்று அம்ஸா கேட்டுக் கொண்டதால் போலீஸார் இந்தப் பிரச்சினையை அத்துடன் விட்டு விட்டனராம்.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications