போலி வாக்காளர்-மதிமுக மாஜி மா.செவுக்கு வாரண்ட்!

Subscribe to Oneindia Tamil

குளித்தலை: போலி வாக்காளர் சேர்ப்பு வழக்கில், நீதிமன்றத்தில் ஆஜராகாத மதிமுக முன்னாள் கரூர் மாவட்டச் செயலாளருக்கு குளித்தலை நீதிமன்றத்தில் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2005ம் ஆண்டு குளித்தலை சட்டசபை தொகுதியில் புதிய வாக்காளர் சேர்ப்பு பணி நடைபெற்றது. அப்போது, போலி வாக்காளர்களை சேர்த்ததாக, அப்போது பொறுப்பில் இருந்த
மதிமுக கரூர் மாவட்டச் செயலாளர் ராமசாமி, அதிமுக கரூர் மாவட்டச் செயலாளர் ராஜா பழனிசாமி, திருச்சி புறநகர் அதிமுக மாவட்டச் செயலாளர் பரஞ்சோதிஆகியோர் மீது தொகுதி தேர்தல் அலுவலராக இருந்த அப்போதைய குளித்தலை ஆர்.டி.ஓ கணேசன் வழக்குப் பதிவு செய்தார்.

இந்த வழக்கு விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில், மதிமுக மாவட்டச் செயலாளராக இருந்த இராமசாமி மட்டும் ஆஜராகவில்லை.

மேலும், கடந்த மாதம் 30ம் தேதி நடந்த விசாரணையிலும், நேற்று ( 27ம் தேதி ) நடந்த விசாரணையிலும் இராமசாமி ஆஜராகாததால், அடுத்த விசாரணைக்கு அவரை ஆஜர்படுத்த குளித்தலை சார்பு நீதிமன்ற நீதிபதி ஆனந்தன் வாரண்ட்
பிறப்பித்தார்.

குற்றம் சாட்டப்பட்டுள்ள இராமசாமி, கடந்த மே மாதம் திமுகவில் இணைந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+