நகை பறித்த பெண் கவுன்சிலரின் மகன் கைது
சென்னை: பெண்ணிடம் சங்கிலி பறித்த சென்னை மாநகரட்சி பெண் கவுன்சிலரின் மகன் கைது செய்யப்பட்டான்.
சென்னை மையிலாப்பூர் கேசவ பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த அரசு ஊழியரான ரேணுகா (42) நேற்றிரவு 7.30 மணியளவில் பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
கேசவ பெருமாள் கோவில் தெருவில் நடந்து சென்றுபோது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ரேணுகாவின் கழுத்தில் இருந்த செயினை பறித்துக் கொண்டு தப்பினர்.
இது குறித்து ரேணுகா மைலாப்பூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து பழைய குற்றவாளிகளின் படங்களைக் காட்டினர்.
அதில் வாலிபரின் போட்டோவை பார்த்து தன்னிடம் செயின் பறித்தவனை அடையாளம் காட்டினார் ரேணுகா.
அந்த வாலிபர் மாநகராட்சி திமுக பெண் கவுன்சிலர் ஒருவரின் மகன் ஆவார். இதையடுத்து அவரைப் பிடித்த போலீசார் ரேணுகாவின் 8 பவுன் செயினை பறிமுதல் செய்தனர்.
அண்ணாநகரில் கிரில் கொள்ளை..
சென்னை அண்ணா நகர் சி பிளாக் முதலாவது அவென்யூவில் மனைவி, மகனுடன் வசித்து வருபவர் கோபால்.
நேற்றிரவு அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது குளியலறையின் ஜன்னல் கம்பியை கழற்றி கிரில் கொள்ளையன் உள்ளே புகுந்தான்.
அலமாரியில் இருந்த கைப்பை எடுத்துக் கொண்டு கிளம்பினான். அதில் வைர நெக்லஸ், 2 தங்க கம்மல்கள், வைர மூக்குத்தி ஆகியவை இருந்தன. பையில் திருடன் கையை விட்டு துழாவியபோது அதில் இருந்த சென்ட் பாட்டில்கள் கீழே விழுந்து உடைந்து சிதறின.
சத்தம் கேட்டு கோபாலின் மகன் எழவே, கொள்ளையன் கைப் பையுடன் தப்பியோடினான். பையில் இருந்த கம்மல்கள், மூக்குத்தியை எடு்த்துக் கொண்டு அதை வீட்டிற்கு பின்புறம் உள்ள சாலையில் வீசிவிட்டு ஓடினான்.
இதுகுறித்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அண்ணாநகர் போலீசார் வந்து வீட்டிற்கு வெளியே கிடந்த கைப்பையை மீட்டனர்.
அதற்குள் கர்ச்சீப்பில் சுற்றி வைக்கப்பட்டிருந்த பல லட்சம் மதிப்புள்ள வைர நெக்லஸ் மற்றும் தங்க நகைகள் அப்படியே இருந்தன. அதை கர்ச்சீப் என நினைத்து கொள்ளையன் போட்டுவிட்டதாகத் தெரிகிறது.
ஹெல்மட் கொள்ளையர்கள் அட்டகாசம்..
சென்னை பெரம்பூர் திரு.வி.க.நகரைச் சேர்ந்தவர் லதா (25). இவர் அங்குள்ள மார்க்கெட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஹெல்மட் அணிந்திருந்த கொள்ளையர்கள் இருவர் அவரை கீழே தள்ளி தாக்கிவிட்டு அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு ஓடிவிட்டனர்.
-
வணிக காஸ் சிலிண்டர் ரூ.5000, 6000 என விற்பனை.. சென்னை,கோவையில் மூடப்படும் ஏராளமான உணவங்கள் -
மார்ச் மாதத்தில் நடந்த மேஜிக்.. சென்னையில் அசாதாரணமான மழை.. வெதர்மேன் வெளியிட்ட பதிவு -
சென்னை மாநகர பஸ் பயணிகளுக்கு குட் நியூஸ்! கேஷ்பேக் ஆஃபரில் டிக்கெட்.. உடனே இதை பண்ணுங்க -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள்.. சென்னையில் இன்றும் மழை வெளுக்கும்.. 24 ஆம் தேதி வரை விடாது! -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம்












Click it and Unblock the Notifications