நைஜீரியாவில் தலிபான்கள் தாக்குதலில் 150 பேர் பலி

தலிபான்களைப் போலவே நைஜீரியாவிலும் ஒரு குழு தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறது. இவர்கள் தங்களது அமைப்புக்கு நைஜீரிய தலிபான்கள் என்றே பெயர் வைத்துள்ளனர்.
இந்த அமைப்பினர் இன்னொரு முஸ்லீம் பிரிவினர் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். கம்போரு -நகலா என்ற நகரில் கடந்த 2 நாட்களாக இவர்கள் பெரும் தாக்குதலில் இறங்கியுள்ளனர். இதில் 150 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், நேற்று போர்னோ மாகாணத்தில் உள்ள மைதுகுரி என்ற இடத்தில் போலீஸ் தலைமையகத்தை தீவைத்து எரித்து விட்டனர்.
பாச்சி, யோபே என்ற இடத்தில் போலீஸாருடன் தலிபான்கள் மோதினர். இதில் ஐந்து போலீஸார் கொல்லப்பட்டனர். தலிபான்கள் தரப்பில் 65 பேர் உயிரிழந்தனர்.
சுங்கத்துறை அலுவலகத்திற்குள் புகுந்து தீவைத்து எரித்த தலிபான்கள் அங்கு வேலை பார்த்து வந்த ஒரு என்ஜீனியரை தொண்டையை கிழித்து கொடூரமாகக் கொலை செய்து விட்டுத் தப்பினர்.
தலிபான்களின் அட்டகாசத்தை ஒடுக்க ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications