கொடூரக் கொலை-நேமிசந்த்துக்கு ஜாமீன் மறுப்பு
சென்னை: உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்ட சென்னை நகை புரோக்கர் சுரேஷ்குமார் கொலை வழக்கில் கைதாகியுள்ள நேமிசந்த்துக்கு சென்னை கோர்ட் ஜாமீன் வழங்க மறுத்து விட்டது.
சென்னை கொடுங்கையூர் முத்தமிழ் நகரை சேர்ந்த சுரேஷ்குமார் என்ற நகை வியாபா. கடந்த மாதம் 6-ந்தேதி இவர் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அவரது கைகள், கால்கள், தலை, உடல் பாகங்கள வெட்டப்பட்டு அவை தனித்தனியாக பார்சல் செய்து வீசப்பட்டது.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் நேமிசந்த் செளத்ரி என்ற வட இந்தியர் கைது செய்யப்பட்டுள்ளார். தான் செய்த குற்றத்தை இவர் ஒப்புக் கொண்டுள்ளார்.
நேமிசந்த் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஜாமீன் கோரி சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், இந்த வழக்கில் 3 புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு உடல் பாகங்களை இணைத்து அது சுரேஷ்குமாரின் உடல் என முடிவு செய்துள்ளனர். அவரை கொலை செய்ததாக கட்டாயப்படுத்தி என்னிடம் போலீசார் வாக்கு மூலம் பெற்றனர்.
இந்த கொலைக்கும் எனக்கும் தொடர்பில்லை. எனவே, எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி தேவதாஸ் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. கொலை செய்யப்பட்ட சுரேஷ்குமாரின் தலை இன்னும் கிடைக்கவில்லை. போலீஸ் விசாரணையும் முடியவில்லை என்று அரசு தரப்பு வக்கீல் தெரிவித்தார்.
இதையடுத்து ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி தேவதாஸ் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications